Tuesday, April 14, 2009

ஜோக் !

அமெரிக்காவில் லெஸ்பியன் பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம் . சர்வே எடுப்பவர் ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறார் . இளம் பெண் ஒருத்தி வெளியே வருகிறாள் . ' உங்கள் பெயர் என்ன ? ' ' ஜெனிஃபர் '. ' நீங்கள் லெஸ்பியனை ஆதரிக்கிறீர்களா ?' ' இந்த மாதிரியான விஷயங்கள் பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது . வேண்டுமானால் என் கணவரைக் கூப்பிடுகிறேன் ' என்றவள் , வீட்டின் உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தாள் , ' ஸ்டெல்லா...ஸ்டெல்லா ! '
" ரேஷன்காரரே , பொங்கலுக்கு பாமாயில் , மண்ணெண்ணெய் போடுவீங்களா ?"
" பொங்கலுக்கு வழக்கமா நெய்...இல்லாட்டி டால்டாதானே எல்லோரும் போடுவாங்க ! "
" நான் இன்னிக்கு ஒரு மனுஷனா உங்க முன்னாடி நின்னுக்கிடிருக்கேன்னா , அதுக்குக் காரணம் , அதோ போராரே...அவர்தான் ! "
" யாருங்க அவரு ? "
" எங்கப்பா ! "
" நம்ம தலைவர் பெண்களை எல்லாம் தாயாக நினைப்பாராமே ...ரோம்ப டச்சிங்தான் !"
" யோவ் ! அவரு 'தாயாக்க' நினைக்கிற டைப்புய்யா !"
தண்டனை - மன்னிப்பு !
' மனிதர்கள் தண்டிக்கிறார்கள் . மகத்தான மனிதர்கள் மன்னிக்கிறார்கள் . மன்னித்ததும் திருந்துபவர்களை மனிதர்கள் என்கிறோம் . திருந்தாதவர்களை ? எப்போதோ , எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது .'
' ஒரு டாக்டரின் தவறு
ஆறடி மண்ணில் புதைந்து விடுகிறது .
ஒரு நீதிபதியின் தவறோ
ஆறடி உயரத்தில் தொங்கிவிடுகிறது ! '

No comments: