Thursday, April 2, 2009

மார்கழி

மார்கழி மாதம் !
நட்சத்திரங்கள் 27 . இவற்றுள் ' திரு ' அடைமொழி கொண்டவை இரண்டே .
1 . திருவாதிரை . 2 . திருவோணம் .
திருவாதிரை சிவனுக்கு உரியது . திருவோணம் திருமாலுக்கு உரியது .
சிவனுக்கு அர்சிக்கப்படுவது வில்வம் . திருமாலுக்கு பூசிக்கப்படுவது துளசி .
சிவபெருமான் கையில் தீச்சட்டியேந்தி வெப்பமாக உள்ளவராதலால் தண்மை மிகு வில்வம் அவருக்கு அர்சிக்கப்படுகிறது . திருமால் பாற்கடலில் துயில்பவர் தண்மை மிகுந்தவர் , எனவே துளசியால் போற்றப்படுகிறார் .
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் தமிழருக்கே சிறப்பான ' ழ ' கரம் பெற்று விளங்கும் மாதம் மார்கழி ஒன்றே ! இம்மார்கழியில் சைவமும் , வைணவமும் ஒன்றாய் அவரவர்கள் இறையைப்போற்றி வழிபடுகிறார்கள்

' என்னிடம் சொல்லப்படுவதை ஒரு மணி நேரம் மறக்கமாட்டேன் . நான் பார்ப்பதை ஒரு நாள் மறக்கமாட்டேன் . ஒரு முறை நான் செய்தால் , ஆயுளுக்கும் மறக்கமாட்டேன் !' என்று சீனாவில் சொல்வார்கள் ..
யதார்த்தத்துக்கும் , கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு நமது ஆலோசனை .....
4 T ஃபார்முலாவைக் கடைபிடியுங்கள் :
T 1 : Touch ( ஸ்பரிசம் ) .
T 2 : Trust ( நம்பிக்கை ) .
T 3 : Talk ( பேச்சு ) .
T 4 : Time ( காலம் ) .
இனிமையான உறவுக்கு ஸ்பரிசம் முதல் தேவை . ஸ்பரிசம் ஆனந்தமாக அமைய அந்த உறவில் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை வேண்டும் . இருவரும் மனம் விட்டுப் பேசும்போதுதான் அந்த நம்பிக்கை ஏற்படும் .இப்படிப் பேசுவதற்கு கணவன் , மனைவி இருவரும் நேரம் ஒதுக்க வேண்டும் .
--- டாக்டர் டி. நாராயணரெட்டி . ஆனந்தவிகடன் . 17-12-2008 .

No comments: