Wednesday, April 1, 2009

ஏப்ரல் 1.

ஏப்ரல் முதல் தேதி , உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது . அன்று யாரை ஏமாற்றி ' முட்டாள் ' ஆக்கினாலும் , அவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் . முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோஜனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான் .
சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட்டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது .
ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர் , லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர் . இதில் முக்கிய அம்சம் , ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும் .
இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் ' ஏப்ரல் ஃபிஷ் ' ( மீன் ) என்றழைக்கிறார்கள் . அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வந்தது . அந்த வருடப் பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கிக் குதூகலமாகக் கொண்டாடி வந்தனர் . ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்படவேண்டும் . மாலையில் கிண்டல் செய்தால் , கிண்டல் செய்பவரேதான் முட்டாள் !
இதைக் குறிப்பிடும் ஒரு கவிதை ...
' மார்ச் மறைந்தது ; ஏப்ரல் வந்தது . நீதான் முட்டாள் ; நானில்லை !' ( March has gone and April comes ; you are a fool and I'm none .)
-- ' நஜன் ' ஆனந்தவிகடன் .01 - 04 - 2009 .

No comments: