Monday, March 30, 2009

பிரதமர்களும், அதிபரும் !

இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் ஒரு ஹோட்டலில் உணவு வேளையில் சந்தித்தனர். தற்செயலாக அங்கே வந்த இங்கிலாந்து பிரதமர் ஆச்சர்யமானார் .
" அட , என்ன இங்கே மாநாடு ?"
"தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மீது குண்டு போட்டுப் பதினான்கு மில்லியன் பாகிஸ்தானியர்களையும், கூடவே முட்டைகள் விற்பனை செய்யும் ஒருவனையும் கொல்லத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறோம் " என்றார் இந்தியப் பிரதமர்.
இங்கிலாந்து பிரதமரின் நெற்றி குழப்பத்தில் சுருங்கியது.
" முட்டை விற்பவனா , என்ன சொல்கிறீர்கள்? " என்றார்.
இந்தியப் பிரதமர் மலர்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் பக்கம் திரும்பிச் சொன்னார்...." நான் சொல்லலே....பாகிஸ்தானியர்களைப்
பற்றி யாரும் பொருட்படுத்த மாட்டாங்கன்னு !"
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 02-04-2008 ).
வெற்றியின் ரகசியம் !
ஒரு மாபெரும் வெற்றியாளரிடம் கேட்டார்கள், " உங்கள் இமாலய வெற்றியின் ரகசியம் என்ன ?" அவர் சொன்னார் , " நான் எடுக்கும் சரியான முடிவிகள் தான் என் வெற்றி ரகசியம் ." "ஓகோ ! அதுதான் ரகசியமா ?" அதுசரி, அதெப்படி நீங்கள் மட்டும் எப்போதும் சரியான முடிவுகளையே எடுக்கிறீர்கள் ?" "அதற்கு, என்னுடைய சில அனுபவங்கள்தான் காரணம்" " அனுபவங்களா?" " அந்த அனுபவங்களை எப்படிப் பெற்றீர்கள் ?" " சில தவரான முடிவுகள் எடுத்ததன் மூலமாகத்தான் "
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோற்காதவர்கள் இல்லை . தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவர்கள் .Fear Of Failure தான்
பெரிய பிரச்சனை. தவறாவிட்டால் வெற்றி. தவறினால் அது பாடம் . அவ்வளவுதான் .
--சோம. வள்ளியப்பன். குமுதம். ( 06-08-2008 ).

No comments: