Saturday, March 28, 2009

அறிஞர்கள் !

1 ) தாமஸ் ஆல்வா எடிசன் .
2 ) கிறிஸ்டோபர் கொலம்பஸ் .
3 ) மார்ட்டின் லூதர் கிங் .
4 ) கலிலியோ கலீலி .
5 ) லியனார்டோ டாவின்சி .
6 ) ஐசக் நியூட்டன் .
7 ) ஃபெர்டினன்ட் மெகல்லன் .
8 ) லூயி பாஸ்டர் .
9 ) சார்லஸ் டார்வின் .
10) தாமஸ் ஜெஃபர்ஸன் .
" ஆயிரம் ஆண்டுகளில் மக்களுக்குப் பெருந்தொண்டு செய்த அறிஞர்களின் பட்டியலை ' லைஃப் ' பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ளது. { இந்த வரிசையில் ஐன்ஸ்டீனுக்கு 22 , மகாத்மா காந்திக்கு 23 -வது இடங்கள் ! }".
--நானே கேள்வி...நானே பதில் ! ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .
கோடீஸ்வரர் !
இப்போது நம் நாட்டு கோடீஸ்வரர்களில் எளிமையானவர் , இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிதாமகர் நாராயணமூர்த்தி. இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் , பெங்களூரில் முன்பு வசித்த அதே சாதாரண வீட்டில்தான் இப்போதும் ஜாகை . வேலைக்காரர்கள் , சமையல்காரர்கள் வைத்துக் கொள்ளாமல் வீட்டு வேலைகளை மனைவி சுதாமூர்த்தியுடன் பகிர்ந்துகொள்கிறார் . ' கார்ப்பரேட் காந்தி ' என்பது இவரது செல்லப்பெயர் . ' தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காகத்தான் பணம் சம்பாதிக்கிறாம் . ஆனால் , அந்தத் தேவைகள் பூர்த்தியான பிறகும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது !' என்பது அவரின் அனுபவ மொழி . கூடுதல் பணம் என்பது சக மனிதர்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வாய்ப்பு !' என்கிறார் !"
--ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .

No comments: