Monday, March 16, 2009

மின்சாரம் !கர்ப்பம் .திருமால் !

சிலவகை எலக்ட்ரான்கள் நியூக்ளியஸை மட்டுமே சுற்றாமல் சுதந்திரமாக வேறு பகுதிகளிலும் சுற்றும் . இதற்கு ப்ரீ எலக்ட்ரான்கள் என்று பெயர் . இப்படி சுதந்திரமாகச் சுற்றும் எலக்ட்ரான்கள் ஒரே திசையில் பாயும் போது உண்டாவதுதான் மின்சாரம் .
மின்சாரத்தைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆண்ட்ரே ஆம்பியர் . மின்சாரத்தின் சக்தி இவர் பெயராலேயே ஆம்பியர் என்று அளவிடப்படுகிறது .
அவர் ஒரு பிரேஞ்சுக்காரர் . ஹான்ஸ் ஆர்ஸ்டட் என்ற விஞ்ஞானி மின்சாரம் உண்டாக்கும் மிங்காந்த வெளிகளைப் பற்றிக் கண்டறிந்தவர் . இவர்கள் கோடு போட்டார்கள் என்றால் அதன் மேல் ரோடு போட்ட ஜீனியஸ் தாமஸ் ஆல்வா எடிசன் .
--- தினமலர் . சிறுவர்மலர் . டிசம்பர் 26 . 2008 .
கர்ப்பம் .
பதட்டம் , டென்ஷன் , மனஅழுத்தம் 3 - க்கும் வித்தியாசம் தெரியணுமா ?
மனைவி கர்ப்பம் ஆனா பதட்டம் .
காதலி கர்ப்பம் ஆனா டென்ஷன் .
ரெண்டும் ஒண்ணா நடந்தா அதுதான் மன அழுத்தம் !
--- குமுதம் . 31 - 12 - 2008 .
திருமால் !
திருமால் எடுத்த பத்து அவதாரங்களையும் வரிசைப்படி வைத்துப் பார்த்தால் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை விளக்குவதாக உள்ளது .
திருமால் முதல் முதலாக ஊர்வன வகையைச் சேர்ந்த கூர்மமாக அவதரித்து பின் , அதைவிட சற்று உயர்ந்ததான மச்ச அவதாரத்தை எடுத்தார் . தொடர்ந்து விலங்குகளில் வராகமாகவும் , விலங்குகளில் உயர்ந்த சிம்ம அவதாரமும் எடுத்தார் . மனித அவதாரம் எடுக்க முனைந்த திருமால் முதலில் வாமனன் என்னும் குள்ள வடிவை எடுத்து பின் ராமனாக மனித அவதாரம் எடுத்தார் .
இதிலிருந்து திருமாலின் அவதாரங்களின் வரிசை முறையில் ஒரு ஒழுங்கு இருப்பது அறியத் தக்கது .

No comments: