Saturday, March 14, 2009

நாக்கு !

" ஒரு மனிதனிடம் மிகச்சிறந்தது எது ? " என்று குரு கேட்டார் சிஷ்யனிடம் .
" நாக்கு " என்றான் சிஷ்யன் .
" மிகக் கேவலமானது எது ? " மீண்டும் கேட்டார் குரு .
" நாக்கு " என்றான் சிஷ்யன் .
" ஏன் , இரண்டு கேள்விகளுக்கும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்கிறாய் ? " என்றார் குரு .
அதற்கு சிஷ்யன் சொன்னான் : " ஒரு மனிதன் தனது நாக்கை எப்படிப் பயன்படுத்துகிறானோ அதைப் பொறுத்தே அவன் பெருமையும் , சிறுமையும் அடைகிறான் . அதனால்தான் இரண்டு கேள்விகளுக்கும் ' நாக்கு ' என்றே பதில் கூறினேன் ! "என்றான் சிஷ்யன் .
--- ( 02 - 12 -1982 ) .

No comments: