Tuesday, March 10, 2009

எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள் கருத்து !
"தன் காலத்தில் தான் சொல்வது நிறைவேறப்போவதில்லை என்று தெரிந்தும் , தான் இல்லாத ஒரு நூற்றாண்டில் நிகழப் போகும் தனது சித்தாந்தத்துக்குத் தமது அன்றைய சொந்த வாழ்க்கையை , தனது சொந்தபந்தங்களை ஏன் பலியிட வேண்டும் ? " --- ஜெயகாந்தன் . -- 13 - 09 -1986 .
" ஒரு ஊனத்தின் மேலே இரக்கப்பட்டு எல்லோரும் தங்களை ஊனமாக்கிக் கொள்ளக் கூடாது . இரக்கம் உண்மையான இரக்கமாயிருந்தால் மற்றவர் ஊனத்தின் வேதனையைப் போக்க பாடுபடவேணும் . எனக்கு காலிலதான் ஊனமே தவிர மனசிலே இல்லே . அதனாலே நான் தைரியனா இருந்துப்பேன் . மனசிலே தைரியம் இல்லாம இருப்பாங்கபாரு , அவங்களைக் காப்பாத்து...." சா. விஸ்வநாதன் ( சாவி ) , 'ஆப்பிள் பசி .'--28-06-1986.
" எனக்குத் தமிழ்ப்பற்று கிடையாது ; அதற்கு அவசியமும் கிடையாது . பெண்டாட்டியை எவனாவது கண்ணடிப்பானா ? " --- கவிஞர் சுரதா . --- 13 -09 - 1986 .
" பெண்களை ஆண்டவன் படைத்திருப்பதே ஆண்கள் அவர்களை நுகர்வதற்காகத்தான் . பெண் பெரிய மனுஷியாகி விட்டால் , என்ன சொல்கிறோம் ? ' பெண் சமைந்து விட்டாள் ' . ஒரு பதார்த்தம் சாப்பாட்டுக்குத் தயார் ஆகிவிட்டது என்பதைக் குறிக்கத்தான் சமையல் என்று சொல்கிறார்கள் . அது போலத்தான் பெண் சமைந்து விட்டாள் என்றால் , அவள் ஆண் நுகரத்தயாராகி விட்டாள் என்று பொருள் ". -- பழ. கருப்பையா .
" தங்கத்தை , எந்தப் பொருளைக் கொண்டும் செய்வது எவ்வாறு முடியாத காரியமோ , அதேபோல் அவர் பெசிய வார்த்தைகளும் ." ---' புயல் .' --- 05 -10 -1986 .
" தாம்பத்யத்திற்கான சில ஒழுங்குமுறைகளை மதிக்காதவர்கள் குடும்பத்தில் வாழவே தகுதியற்றவர்கள் ." --- உஷா சுப்ரமணியன். ' இளமை கனவுகள் .' --- 28 - 06 -1986 .
" இந்திய ஜனாதிபதியைப் போல சம்பளம் வாங்குகிறேன் ; ஆனால் இந்தியாவைப் போல கடனும் வாங்குகிறேன் . " --- கவிஞர் கண்ணதாசன் . ---07 - 12 -1986 .
" திருமணம் என்பது -- உலகறிய ' உடல் ' களை இணைக்கும் ஒரு ஒப்பந்தம் . இதில் --- உள்ளங்கள் ஒன்று படுவது அவரவர் அதிஷ்டம் ." --- ராஜேஸ்குமார் . ' வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் ' -- 28 -06 -1986 .

No comments: