Tuesday, February 24, 2009

மூன்று !

வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம் ; காதடித்து நின்று அசைந்தாடும் யானை ; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப்பாம்பு !
ஒரு மழைத் துளி மணிக்கு ஏழு மைல் வேகத்தில் தரையில் விழுகிறது !
இரண்டாம் உலகப் போரில் 57 நாடுகள் பங்கு பெற்றன !
தனது காதுகளைச் சுத்தம் செய்யுமளவுக்கு ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு நீளம் !
ஜூலியஸ் சீசர் தன் வழுக்கைத் தலையை மறைக்க , இலைகளால் ஆன கிரீடத்தைப் பயன்படுத்தினார் !
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முதலில் தனது இடது காலைத்தான் பதித்தார் !
யானைக்கு 'அடி' சறுக்குமோ இல்லையோ , உலகத்திலேயே 'ஜம்ப்' பண்ண முடியாத ஒரே விலங்கினம் யானைதான் !
--ஆனந்தவிகடன் .{ 23-07-2008 .}

No comments: