Monday, February 23, 2009

விசுவாசம் !

அயர்லாந்துக்கு ஒருவன் சுற்றுலா சென்றிருந்தான் . மிகவும் தாகமெடுத்தது. ஒரு வீட்டில் அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டான் .
அந்த வீட்டுப் பெண்மணி அவன் நிலை பார்த்து , ஒரு கோப்பையில் சூடான சூப் கொடுத்தாள் .
வீட்டு நாய்க்குட்டி விருந்தாளியிடம் ஓடி வருவதும் அவன் கால்களுக்கு இடையில் புகுந்து செல்வதும் , செல்லமாகக் குரைத்து அவன் கவனத்தைக் கவர்வதுமாக இருந்தது .
"நாயைக்கூட மிக நட்புடன் இருக்கப் பழக்கியிருக்கிறீர்கள் " என்றான் , வந்தவன் பாராட்டும்விதமாக .
"அப்படியில்லை, நீங்கள் பயன்படுத்திக்கொண்டு இருப்பது அதனுடைய உணவுக் கோப்பை . அதனால் உங்களைவிட்டு நகர மாட்டேன் என்கிறது " என்றாள் . அந்தப் பெண்மணி .
-- சத்குரு ஜக்கி வசுதேவ் . ஆனந்தவிகடன். ( 22-10-2008 ) .

No comments: