Sunday, February 22, 2009

கோடீஸ்வரர் !

இப்போது நம் நாட்டு கோடீஸ்வரர்களில் எளிமையானவர் , இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிதாமகர் நாராயணமூர்த்தி. இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் , பெங்களூரில் முன்பு வசித்த அதே சாதாரண வீட்டில்தான் இப்போதும் ஜாகை . வேலைக்காரர்கள் , சமையல்காரர்கள் வைத்துக் கொள்ளாமல் வீட்டு வேலைகளை மனைவி சுதாமூர்த்தியுடன் பகிர்ந்துகொள்கிறார் . ' கார்ப்பரேட் காந்தி ' என்பது இவரது செல்லப்பெயர் . ' தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காகத்தான் பணம் சம்பாதிக்கிறாம் . ஆனால் , அந்தத் தேவைகள் பூர்த்தியான பிறகும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது !' என்பது அவரின் அனுபவ மொழி . கூடுதல் பணம் என்பது சக மனிதர்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வாய்ப்பு !' என்கிறார் !"
--ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .

No comments: