Saturday, February 21, 2009

வராஹம் !

பெருமாள் கோயிலில் வழிபட்டது வராஹம் : 2 நாளாக கொடிமரத்தை வலம் வந்த அதிசயம் .
ஆந்திராவில் பக்தர்கள் பரவசம் .
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சித்தாந்தம் கிராமத்தில் ஸ்ரீ தேவி , பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. வராகத்தின்( பன்றி) அதிசய செயல் காரணமாக இந்த கோயில் ஆந்திரா முழுவதும் பிரபலமாகி உள்ளது. இக்கோயி
லுக்கு , டிசம்பர் மாதம் 14 -ம் தேதி கலையில் வந்த வராகம் ஒன்று கோயில் கொடி மரத்தை வலம் வரதுவங்கியது . 14 -ம் தேதி இரவு வரை உணவு , தண்ணீர் ஏதும் இல்லாமல் சுற்றி விட்டு, 15-ம் தேதி மதியம் திடீர் என்று மயங்கி விழுந்தது .பொது மக்கள் கால்நடை டாக்டர்களுக்குத் தகவல் கொடுத்து , அவர்கள் தந்த சிகிச்சையால் வராஹம் மீண்டும் நடமாடத் தொடங்கியது. மேலும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக அருகில் ஓடும் கோதாவரி நதிக்குச் சென்று குளித்த அது, கோயிலை சுற்ற துவங்கியது . இதற்கிடையே வராஹத்திற்கு பொட்டு வைத்து , பூஜை நடத்திய பொதுமக்கள் அதற்கு உணவும் கொடுத்தனர். பக்தி செலுத்துவதில் மனிதனையும் மிஞ்சி விட்டது வராஹம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்
-- தினமலர் . 17 - 12 - 2008 .

No comments: