Friday, February 20, 2009

" டிஎன்ஏ "

ஆங்கிலத்தில் " டியோக்ஸிர்போ - நியூக்ளிக் - ஆசிட் " என்ற 3 வார்த்தைகளில் உள்ள முதல் 3 எழுத்துக்களைத்தான் " டிஎன்ஏ " என்று சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள் .
வளைந்து கிடக்கும் இரட்டை பட்டை ரிப்பன் போன்ற இந்த அமைப்பை வெளியில் எடுத்து நீட்டிப் பார்த்தால் அது 5 அடி நீளம் இருக்கும் .
இந்த அபாரமான கண்டுபிடிப்பு மூலம் , மனித உடலின் ரகசியங்கள் அனைத்தும் அம்பலம் ஆகப்போகின்றன .
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நோயால் அவதிப்படுவது ஏன் ? சிலர் குண்டாக , வேறு சிலர் ஒல்லியாக இருப்பது எதனால் ? பலர் சாந்தமாகவும் , சிலர் மூஞ்சியை உர்ரென்று வைத்துக்கொண்டும் இருப்பது என்ன காரணத்தினால் ? சிலர் மேதைகளாகவும் , அரசியல்வாதிகளாகவும் , அடிமுட்டாளாகவும் இருப்பது எதன் அடிப்படையில்.... இப்படி ஒவ்வொரு மனிதனின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ' டிஎன்ஏ 'என்பதில் உள்ள ரகசியங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் .
ஒருவருக்கு தோன்றும் எந்தவிதமான நோயையும் முன்கூட்டியே கண்டுபிடித்து அதை ஆபரேஷன் இன்றி , மருந்து இன்றி குணப்படுத்தி விடலாம் . அவரது சந்ததிக்கே அந்த நோய் ஏற்படாமல் தடுத்துவிடலாம் .
ஒருவரின் உடல் வளர்ச்சியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் .
ஒருவரின் திறமையை மேம்படுத்தி அறிவாளியாக மாற்றலாம் .
எல்லாவற்றிறுக்கும் மேலாக , அந்தக் காலத்தில் அகத்தியர் , திருமூலர் போன்ற முனிவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்வார்களே ! அதுபோல மனிதனின் வாழ்வை 1,200 ஆண்டுகள் வரை நீடிக்க செய்யவும் முடியும் .
அமெரிக்கா , இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜெர்மனி , ஜப்பான் , சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் , " ஹியூமன் ஜினோம் புராஜக்ட் " என்ற திட்டத்தின் கீழ் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள் .
--- தினமலர் . வியாழன் -- 29 - 06 - 2000 .

No comments: