Wednesday, February 18, 2009

எரிமலை !

பூகம்பம் வந்தால் சிறிது காலத்தில் எரிமலையும் வரக்கூடும் . பூமி வெடிப்பு ஏற்படும் போது அந்த வெடிப்பில் தண்ணீர் உள்ளே புகுந்து விடும் . பூமியின் அடியில் எப்போதும் வெப்பம் இருக்கிறது . இந்த குளிர்ந்த தண்ணீர் உள்ளே போகும் போது , அந்த உஷ்ணத்தினால் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கிறது . கொதித்த தண்ணீர் பூமிக்கு அடியில் சென்றவுடன் நிலத்தின் அடியில் உள்ள உலோகம் , கந்தகம் ஆகியவற்றுடன் உருகி நெருப்பாகி , வெளியே நெருப்பு குழம்பாக பயங்கர சீற்றத்துடன் வெளிவரும் . இதுதான் எரிமலை என்று கூறப்படுகிறது .
பூகம்பம் -- நிலநடுக்கம் !
நில நடுக்கம் வேறு பூகம்பம் வேறு ஆகும் . நிலம் அசைந்தால் அதற்கு பெயர் நில நடுக்கம் . இரண்டாகப் பிளந்தால் அதற்கு பெயர் பூகம்பம் .
--- புவியியல் நிபுணர் பாசில் . சுப்பிரமணியம் . --- தினமலர் . 20 - 09 - 1988 .

No comments: