Tuesday, February 17, 2009

அன்னை தெரசா .

அது 1946 செப்டெம்பர் 10 டார்ஜிலிங்கின் முகடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த்து ரயில் . ஒவ்வோர் ஆண்டிலும் இதுபோன்று மலைகளில் சென்று மௌனமாக ஆழ்ந்து பிரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சிஸ்டர்களுடன் மதர் தெரசாவும் சென்று கொண்டிருந்தார் .
அப்போதுதான் ஒரு மாயாஜாலம் போன்றோ , மயக்கம் தரும் அதிசயம் போன்றோ அல்லாமல் எளிமையாக , இயல்பாக ஒரு மாற்றம் தனக்குள் நிகழ்வதை அன்னை தெரசா உணர்ந்தார் .
உலகை உய்விக்க வருகிற மகான்கள் அனைவருக்கும் இந்தத் தருணம் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது . தெரசாவுக்கு அந்தத் தருணம் நிகழ்ந்தது அந்த ரயில்பயணத்தில் . அதை ' உள்ளிருந்து ஒரு குரல் ( Call within a Call ) ' என்று அவர் குறிப்பிட்டார் . அந்தத் தினத்தை ' ஞானம் பெற்ற தினம் ( Inspiration Day ) ' என்று குறிப்பிடுகிறார்கள் .
அந்த அழைப்பு தெரசாவின் பாதையை மாற்றிப்போட்டது . அவரது கால்கள் கல்கத்தாவின் சேரிகளிலும் வீதிகளிலும் நடக்கத் தொடங்கின . ஒரு தியாக சரித்திரம் துவங்கியது .
--- ஆனந்தவிகடன் . 14 - 09 - 1997 .

No comments: