Monday, February 9, 2009

சூயஸ் கால்வாய் .

ஐரோப்பாவை ஆசிய நாடுகளுடன் கடல் வழியாக இணைக்கும் சூயஸ் கால்வாய் 1869 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு கடல் வழியாக வருவதற்கு ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி வரும் நிலை நீண்ட நெடுங்காலம் நீடித்தது. எகிப்து நாட்டின் சூயஸ் பகுதியில் மத்தியதரைக்கடலுக்கும், செங்கடலுக்கும் கால்வாய் ஏற்படுத்தினால் மிக எளிதாக ஆசியாவுக்கு சென்றுவிடலாம்.
இருகடல்களையும் இணைக்கும் முயற்சி பழங்காலத்தில் நடந்ததற்கான பல குறிப்புகள் கிடைத்துள்ளன. நைல் நதி வரை கால்வாய் வெட்டி பின்னர் அங்கிருந்து செங்கடலுக்கு கப்பல்கள் சென்றதாக பண்டைய பயண புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.
192 கி.மீ,.தூர கால்வாய் மூலம் மத்தியத்தரைக்கடலுடன் செங்கடல் இணைந்தது.1869-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கப்பல் போக்குவரத்துக்கு கால்வாய் திறக்கப்பட்டது.
எகிப்தின் தேசியவருவாயில் சூயஸ் கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
--தினமலர். 17-11-2008.

No comments: