Sunday, February 8, 2009

ஸ்ரீ அரவிந்தர் .

மகான் ஸ்ரீ அரவிந்தர், 1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 -ல்,கல்கத்தாவில் பிறந்தார். 1910-ல் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகத்தான் அவர் பாண்டிச்சேரியில் காலடி வைத்தார். அவர் புதுவையில் வந்து தங்க ஏற்பாடு செய்தவர்கள் பாரதியாரும், அவரது தோழர் மண்டபம் ஸ்ரீ நிவாஸாச்சாரியாரும் ஆவர். சிறைவாசம் செய்து, தேசத் தியாக வாழ்வை நடத்திக்கொண்டு இருக்கும் போதே, பாண்டிச்சேரி மண், அரவிந்த கோஷூக்கு அவருடைய உண்மையான பணியை உணர்த்தியது. அவருள் ஒரு மகான் பிறந்தார்.-
புதுச்சேரி மகான் அரவிந்தரின் முக்கிய சீடராக விளங்கியவர் பிரான்சு நாட்டை சேர்ந்த மீரா.அரவிந்தரின் மறைவிற்குப் பின்னர் ஆசிரமத்தை நடத்தி வந்த மீராவை அரவிந்தரின் சீடர்கள் 'ஸ்ரீ அன்னை' என அழைத்தனர்.1973-ம் நவம்பர் 17-ம் தேதி ஆசிரமத்தில் அன்னை சமாதியடைந்தார்.'
--ஆனந்தவிகடன். ( 20-08-2008 ).

No comments: