Friday, February 6, 2009

' கோபம் ' உணவு

புத்தர் பார்வையில் ' கோபம் '
புத்தரிடம் ஒருவர், ' கோபத்தை எதனுடன் ஒப்பிடலாம் ? ' என்று கேட்டார் . அதற்கு புத்தர் , ' கோபம் என்பது தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை கையில் எடுத்து , அதனால் நமக்கு வேண்டாதவரை தாக்க முயற்சிப்பதைப் போன்றது . அதை கையில் பிடித்து சுட்டுக் கொள்வதின் மூலம் பாதிக்கப்படுவதும் நாமே ! ' என்றார் .
இனிமையான உணவு
இயேசுநாதரிடம் சீடர் ஒருவர், ' உலகிலேயே மிகவும் இனிமையான உணவு எது ? ' என்று கேட்டார் . அதற்கு இயேசுநாதர் , ' ஒருவன் தன் உழைப்பால் பெற்ற கூழ் அமிர்தத்திலும் மேலானது' என்று பதிலளித்தார் .
--- தினத்தந்தி . இலவச இணைப்பு .27 -05 -2008 .

No comments: