Thursday, February 5, 2009

அன்னை தெரஸா.

( 27-08-1910-- 05-09-1997 ).
அன்னை தெரஸாவுக்கு இப்போது 98 வயது ஆகிறது. யூகோஸ்லேவியாவில்,வசதியான அல்பேனியக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ,18 வயதில் கன்னிமாடத்தில் சேர்ந்து கல்கத்தா வந்தார்.ஒன்பது ஆண்டு பயிற்சிக்குப் பின், புனித மேரிக் கல்லூரியில் ஆசிரியராகவும்,பின்பு பிரின்ஸ்பாலாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
"ஏழைகளையும், நோயாளிகளையும் வறுமை ஒரு பக்கம் தாக்கினாலும், அவர்களைச் சமூகம் ஒதுக்கும் அந்தப் புறக்கணிப்பு உணர்ச்சிதான் அவர்களை மிகவும் பாதிக்கிறது" என்கிறார் அன்னை.
அன்னை தெரஸா புது டில்லியில் குழந்தைகள் இல்லத்தை நிருவியபோது, அதைத் துவக்க நேரு வந்திருந்தார்.அன்னை தன்னுடைய பணிகளை விளக்க முன் வந்தபோது ," மதர்...நீங்கள் சொல்லவே வேண்டாம். நீங்கள் ஆற்றி வரும் அத்தனைப் பணிகளும் எனக்குத் தெரியும். உங்கள் பணியினால் கவரப்பட்டுத்தான் நானே இங்கு வந்திருக்கிறேன்" என்று புன்முறுவலோடு சொன்னார் நேரு.
"ஏழைகளுக்கான சேவையே கடவுள் சேவை" என்கிறார் அன்னை தெரஸா.

No comments: