Tuesday, February 3, 2009

நேரு-நிலா- கொடி !

நேருவின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நேருவின் தோற்றம்: கி.பி. 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 - ம் தேதி. மறைவு: 1964 - ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி.
இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்த ஒரே தலைவர்.மரணம் சம்பவிப்பதற்கு முன்பு,' நான் இறந்த பின்பு, மத சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ பின்பற்றக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தாராம். அதன்படியே அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்தது.
சந்திராயன் -- 1 ...
கவிஞனுக்கு கருப்பொருளாய்,ஓவியனுக்கு வரைபொருளாய், காதலருக்கு கனவுப்பொருளாய், குழந்தைக்கு கதைப்பொருளாய்,எட்ட மிதந்து களிப்பூட்டிய நிலவை ...நிஜத்தில் இந்தியா தீண்டிப் பார்க்கும் நாள் வந்தேவிட்டது !
நிலவுக்கு இந்தியாவின் முதல் விண்கலம் சந்திராயன் - 1 கடந்த மாதம் (2008 -ம் ஆண்டு ) 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.அடுத்த கட்டமாக இன்று ' மூன் இம்பேக்ட் புரோப்' (எம்.ஐ.பி.) என்ற கருவி நிலவில் இறங்குகிறது.நான் கு புறமும் பெயிண்ட் அடிக்கப்பட்ட மினியேச்சர் போன்ற சிறிய அளவிலான 'தேசியக்கொடி'யையும் இந்த விண்கலத்தில் அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த கொடியை எம்.ஐ. பி. கருவி தன்னுடன் எடுத்து சென்று, நிலவின் மேற்பரப்பில் ஊன்றுகிறது. நிலவுக்கு இ தியா அனுப்பிய முதல் அங்கு சென்றதற்கான சரித்திர அடையாளத்தை அழுத்தமாக பதிக்கும் விதமாக நிலவின் மேற்பரப்பில் நமது தேசியக்கொடி ஊன்றப்படுகிறது.

No comments: