Wednesday, January 21, 2009

மத்திய சிறைச்சாலை !

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரே 14 ஏக்கர் பரப்பில் 170 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது சென்னை மத்திய சிறைச்சாலை . கடந்த 1837ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் ' மெட்ராஸ் சீர்திருத்த மையம் ' என்ற பெயரில் 14.86 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது இந்த சிறைச்சாலை . அந்தமான் சிறைக்கு கைதிகளை அனுப்புவதற்கு முன்னர் தற்காலிகமாக தங்கவைக்கப் பயன்படும் இடமாகவே இது பயன்பட்டுவந்தது .
இந்த சிறைச்சாலையின் 24 ம் எண் சிறையின் , தனி அறையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் வீர சாவர்க்கர் , மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , தற்போதைய முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர் .
மொத்தம் 1,200 கைதிகளை அடைப்பதற்கு இந்த சிறைச்சாலையில் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன . கைதிகளுக்கு போதுமான வசதிகள் இங்கு இல்லை என்பதால் , மத்திய சிறைச்சாலையை புழலுக்கு மாற்றும் திட்டம் உருவாகி , 2006 ஆண்டு நவம்பர் 18ம் தேதி புழலுக்கு மாற்றப்பட்டது .
இவ்வளவு வரலாறு படைத்த இந்த மத்திய சிறைச்சாலை இன்று ( 21 - 01 - 2009 ) இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது .

No comments: