Thursday, January 22, 2009

பிரதோஷம்

.

துன்பம் விலக்கும் பிரதோஷம். பிரதோஷம் என்பது தவறுகளையும் மகா பிரதோஷம் என்பது மகா ( பெரிய ) தவறுகளையும் நேர் செய்யும் காலங்கள் ஆகும் . அந்த நேரத்தில் , சிவபெருமானை வழிபட்டால் துன்பங்கள் விலகும் வளர்பிறையில் சதுர்த்தி அன்றும் , தேய்பிறையில் திரயோதசி அன்றும் மாலை 4 - 30 மணியிலிருந்து 6 - 00 மணி வரை பிரதோஷ காலமாகும் . அப்போது , சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கும் இடையே நின்று நடனமாடி தரிசனம் தருவதாக ஐதீகம் .
புத்தர் பார்வையில் ' கோபம் '
புத்தரிடம் ஒருவர், ' கோபத்தை எதனுடன் ஒப்பிடலாம் ? ' என்று கேட்டார் . அதற்கு புத்தர் , ' கோபம் என்பது தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை கையில் எடுத்து , அதனால் நமக்கு வேண்டாதவரை தாக்க முயற்சிப்பதைப் போன்றது . அதை கையில் பிடித்து சுட்டுக் கொள்வதின் மூலம் பாதிக்கப்படுவதும் நாமே ! ' என்றார் .
இனிமையான உணவு
இயேசுநாதரிடம் சீடர் ஒருவர், ' உலகிலேயே மிகவும் இனிமையான உணவு எது ? ' என்று கேட்டார் . அதற்கு இயேசுநாதர் , ' ஒருவன் தன் உழைப்பால் பெற்ற கூழ் அமிர்தத்திலும் மேலானது' என்று பதிலளித்தார் .
--- தினத்தந்தி . இலவச இணைப்பு .27 -05 -2008 .

No comments: