Tuesday, January 13, 2009

விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் ( 12 -01 -1863 -- 04 - 07 -1902 ) .
ஆங்கிலம் பேசும் அற்புத சந்நியாசி !
விவேகானந்தர் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது . இவர் 19 -ம் நூற்றாண்டின் நாட்டின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர் . இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா . ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்துள்ளன . 1893-ம் ஆண்டு சிகாகோவில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அவரது சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை . கோல்கத்தாவைச் சேர்ந்த விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனான இவர் இள வயது முதலே தியானம் பழகினார் . ராமகிருஷ்ணரை முதன் முதலாக இவர் சந்தித்த ஆண்டு 1881 . ராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால் , பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் இரண்டையும் புரிந்துகொண்டார் . 1886 -ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களும் துறவிகளாயினர் . பின்னர் நான்கு ஆண்டுகள் நாடு முழுவதும் விவேகானந்தர் பயணம் செய்தார் . பயண முடிவில் 24 டிசம்பர் 1892 ல் கன்னியாகுமரி சென்று கடல் நடுவில் அமைந்த பாறை மீது 3 நாள் தியானம் செய்தார் . இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது . 1902 -ம் ஆண்டு ஜூலை 4 -ம் நாள் , தனது 30 -ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார் . அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவியது .

No comments: