Saturday, January 31, 2009

'தெற்கு'.

மனித வாழ்வில் 'தெற்கு' மகத்தான பங்கு பெருகிறது. அவனுக்கு உயிரூட்டும் தென்றலும் தெற்கிலிருந்து வருகிறது;பிறவி அகற்றும் யமன் திசையும் தெற்குதான்....ஆக வாழ்வு--இறப்பு இரண்டும் தெற்கிலிருந்துதான் வருகின்றன.
பொன். பாஸ்கரமார்தாண்டன். -- தேவி தரிசனம். ( 15-02-1982).
சங்கீதம் !
சங்கீதத்தில் 'கல்பித சங்கீதம்' ,'கல்பனா சங்கீதம் ' என்று இரண்டு வகை உண்டு.
சொல்லிக் கொடுப்பதை அப்படியே பாடுவது 'கல்பித சங்கீதம்'.
அந்தந்த நேரத்திற்கு ஏற்ப உள்ளத்தில் எழும் உணர்வுக்களை வெளிப்படுத்துவது 'கல்பனா சங்கீதம்'
--குங்குமம் . 31-01- 1982.

No comments: