Wednesday, January 21, 2009

புரட்சியின் தலைவன் !

லெனின் ( 10 - 04 - 1870 -- 21 - 01 - 1924 ) .
ரஷ்யாவில் சிம்பிர்ஸ்க் என்ற வால்கா டவுனில் , 10 -04 - 1870 -ல் இவர் பிறந்ததும் , ' விளாடிமிர் இலியச் உலைனாவ் ' என்று இவருக்குப் பெயர் வைத்தார்கள் . பின்னாளில் , லெனின் என்று அழைக்கப்பட்டார் . இவரது தகப்பனார் , ஒரு பள்ளிக்கூட இன்ஸ்பெக்டர் . தாயாருக்குச் சங்கீதம் தெரியும் . பல பாஷைகளும் தெரியும் .இவற்றையெல்லாம் அவள் தன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாள் . அவளுக்கு லெனின் மூன்றாவது குழந்தை .
லெனின் தன் 16-வது வயதில் தகப்பனாரை இழந்தார் . அடுத்த வருஷத்தில் மற்றொரு போரிடி ! மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் , ஜாரைக் கொல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்டு , தூக்கிலிடப்பட்டார் .
ஜாரின் அடக்குமுறை தாண்டவமாடியது . மாணவர் சங்கங்கள் கலைக்கப்பட்டு , பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் .இதர மாணவர்கள் இதைக் கண்டித்தனர் . தடை செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டதாக ' காஜான் சர்வ கலாசாலை ' யிலிருந்து லெனின் வெளியேற்றப்பட்டு , ஒரு கிராமத்தில் அடைக்கப்பட்டார் . கிராமத்திலிருந்தபடியே , கல்லூரி செல்லாமல் படித்த லெனின் , சட்டப் பரீட்சை எழுதி , முதல் தரமாகத் தேறினார் .
கொடுங்கோலாட்சியை வீழ்த்த பயங்கர இயக்கம் உதவாது : மக்கள் இயக்கம் வேண்டும் என்று ரஷ்யாவைப் புரட்சிக்குத் தயாராக்கினார் லெனின் .

No comments: