Monday, January 19, 2009

இசைமணி !

சீர்காழி கோவிந்தராஜன் ( 19 - 01 - 1933 -- 24 - 03 - 1988 ) .
திருவையாறு ஆராதனை உற்சவ கமிட்டிக்கு நான்காண்டுகள் காரியதரிசியாக இருந்திருக்கிறார் சீர்காழி . வீணை பிச்சுமணியுடன் இணைந்து , உற்சவத்தை அமோகமாக நடத்தியிருக்கிறார் .
1956 - ல் சுலோசனாவின் கரம் பிடித்தார் சீர்காழி . சிஷ்யரின் திருமண வரவேற்பில் அவரது குருநாதர் , புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் என். சுவானிநாதப்பிள்ளை புல்லாங்குழல் கச்சேரி !
" என் குருநாதரின் எதிரில் நான் நாற்காலி போட்டு உட்கார்ந்துகிட்டதே இல்லை . அன்னிக்கு வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் நான் நின்னுக்கிட்டேதான் இருந்தேன் . குருநாதர் இதைக் கவனிச்சுட்டார் . மேடையில் வாசிச்சுக்கிட்டிருந்தபடியே என்னை உட்காரச் சொல்லிச் சைகை காட்டினார் . அப்பவும் எனக்கு மனசே கேட்கலே . ஆனா , குருநாதரோ பக்கத்திலிருந்தவர் மூலமா சொல்லியனுப்பி என்னை உட்கார வைத்தார் " என்று சீர்காழி சொன்னபோது , அந்தக் காலத்தில் நிலவிய உண்மையான குரு- சிஷ்ய மரியாதை பளிச்சென்று வெளிப்பட்டது .
-- வீயெஸ்வி

No comments: