Friday, January 9, 2009

'சோற்றுப் பருக்கை '

ஒரு நாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. என் அருகில் இருந்த என் மாமன் புன்னகையோடு சொன்னார்_ "இந்தப் பருக்கையோட நிலையைப் பார்த்தியா...பாவம் ! " நான் வியப்பாக, "ஏன் ?" என்றேன்.
"இந்தப் பருக்கை எத்தனை இடத்தில தப்பிச்சிருக்கு. அறுவடையில், களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகயில, ....அப்படின்னு எத்தனை இடங்கள் ! எங்கேயும் தவறாம அதனேட பயனுக்காக எவ்வளவு தூரம் கடந்து வந்துச்சு, இப்பப் பாரு....சாதமா மாறி , உன் கைக்கு வந்து கடைசி நொடியில தவறி விழுந்துடுச்சு....எவ்வளவு பாவம் அது....!"
நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரிடமிருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.!.
நம்முடைய பிறப்பும் அந்த அரிசி போலத்தான். நாமும் எத்தனை இடங்களிலிருந்து தப்பித் தப்பி வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம். நாம் ஒரு போதும் அந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக்கூடாது.
-டைரக்டர் மகேந்திரன். ஆனந்த விகடன். 19-09-1999,

No comments: