Monday, January 5, 2009

தெரிஞ்சா...தெரியாமலா ?

" டி . வி .-- யில ' சின்ன வீடு ' படம் ஓடிக்கிடிருந்தது . என் அண்ணன் பையனுக்குப் பன்னிரெண்டு வயசு . அவன் என் கிட்ட வந்து ' சித்தப்பா , சின்ன வீடுன்னா என்ன ? ' னு கேட்டான் . எனக்குத் தர்மசங்கடமா இருந்திச்சு . ' நீ படிக்கிற பையன் , இதெல்லாம் இப்ப தெரிஞ்சுக்க வேண்டாம் . பின்னால தெரிஞ்சுக்கலாம் . இப்ப போய் படிடா ' ன்னு சொன்னேன் . அதுக்கு அவன் ' நீங்க சொல்லுங்க சித்தப்பா....நான் இப்பவே
தெரிஞ்சு வெச்சுக்கறேன்' னு சொன்னான் . ' அடப்பாவி ! தெரிஞ்சு வெச்சுக்கறது இல்லடா சின்னவீடு , தெரியாம வெச்சுகிட்டாதான் சின்னவீடு ' னு பதில் சொல்லி வெச்சேன் ! "
--- சென்னையில் நடந்த ' உரத்தசிந்தனை ' நிகழ்ச்சியில் தமிழக அரசின் சமூக நலத்துறை தலைவர் உ . கருணாகரன் சொன்னது

3 comments:

கோவி.கண்ணன் said...

//தெரிஞ்சு வெச்சுக்கறது இல்லடா சின்னவீடு , தெரியாம வெச்சுகிட்டாதான் சின்னவீடு ' னு பதில் சொல்லி வெச்சேன் ! "
//

:)
சின்ன பசங்களை இப்படியெல்லாமா கெடுப்பாங்க !

க. சந்தானம் said...

என்னா செய்யறது ! தமிழக சமூக நலத்துறைத் தலைவர்தான் இப்படி சொல்லியிருக்கிறார் !

க. சந்தானம் said...

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
பகையோ சினமோ நமக்கெதற்கு ,
சிலநாள் வாழ்வில் வெறுப்பெதற்கு !