Sunday, January 4, 2009

நெட் ஜோக் !

வேடிக்கை பார்க்க கிராமத்துக்கு விஜயம் செய்த அவருக்கு ஒரு வேதனையான காட்சி காத்திருந்தது . கால் ஒன்றை முழுவதுமாக இழந்து அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தபடி முனகிக்கொண்டிருந்தது ஒரு ஆடு .
ஆட்டுக்குச் சொந்தக்காரர் அருகிலேயே இருக்கவும் அவரை விசாரித்தார் நம்ம ஆள் . " அது பெரிய சோகக் கதைங்க ...."என்று இழுத்தவர் , " ஒரு நாள் ராத்திரி திடீர்னு எங்க வீடு தீப்பிடிச்சுடுச்சு . எதுவும் தெரியாம வீட்டுக்குள்ளே நாங்க தூங்கிகிட்டிருந்தோம் . அப்ப எங்களை எழுப்பி விட்டுக் காப்பாத்தின ஆடு சார் இது " என்றார் .
"சரி....அவ்வளவு உதவி பண்ணின ஆட்டை இப்படி வெச்சுட்டிருக்கியே ....இது நியாயமா ? " என்று கேட்டார் நம்ம ஆள் .
" இன்னும் கேளுங்க . ஒரு தடவை டிராக்டர்ல இருந்து நான் தவறி விழுந்துட்டேன் . உடனே ஓடிப் போய் ஆட்களையெல்லாம் அழைச்சுட்டு வந்து , என் உயிரைக் காப்பாத்தினதும் இந்த ஆடுதான் .! "
" இன்னமும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலை..."
" பதில்தான் சார் சொல்லிகிட்டிருக்கேன் , இவ்வளவெல்லாம் உதவி பண்ணிய ஆட்டை ஒரே நாள்ல எப்படி சார் மட்டனாக்க மனசு வரும் ?! "

No comments: