Tuesday, December 23, 2008

இமயமலை !

இமயமலையின் பனிச் சரிவுகளில் அந்தத் துறவியைச் சந்தித்தான் மலையேறும் வீரன் ஒருவன். ' எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குப் போவதற்கான வழி எது ? ' என்று துறவியிடம் கேட்டான். ' நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்குவதாக இருக்கட்டும். வெகு விரைவில் சிகரம் உன் காலடியில்! ' என்றார் துறவி.
இதுதான் வாழ்கைக்கான எளிய மந்திரம். உங்களின் ஒவ்வொரு சிந்தனையும் செயலும் உங்கள் லட்சியத்தை நோக்கியதாக இருக்கவேண்டும் என்கிறார் ராபின் ஷ்ர்மா. ' தி மான்க் ஹு ஸோல்ட் ஹிஸ் ஃபெராரி ' புத்தகத்தின் மூலம்.
--கி. கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 20-08-2008 ) .

No comments: