Sunday, December 7, 2008

'கலைக்களஞ்சியம் '

( 06 -12 - 1768 )
அறிவு புரட்சிக்கு வித்திட்ட என்சைக்கிளோபிடியா என்ற கலைகளஞ்சிய தொகுப்பின் முதல் பதிப்பு 1768 -ம் ஆண்டு இதே நாளில் வெளியானது .ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவை சேர்ந்த ஆதம் மற்றும் சார்லஸ் பிளாக் என்பவர்கள் இணைந்து , பொது அறிவை இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலான ' கலைகளஞ்சியம் ' ( என்சைக்கிளோபிடியா ) வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டனர் .
ஒரு வார்த்தையை பற்றி அல்லது ஒரு பொருள் பற்றி , மாநிலம் , நாடு பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக்கித் தருவதுதான் இதன் நோக்கமாக இருந்தது .இதற்காக பிரிட்டானிக்கா என்சைக்கிளோபிடியா என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது .
சுவிஸ் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் மற்றும் நடிகர் ஜேக்கியூ சாப்ரா என்பவர்தான் என்சைக்கிளோபிடியா வெளியிடும் , என்சைக்கிளோபிடியா பிரிடானிக்கா நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளராவார் .
2004-ம் ஆண்டு என்சைக்கிளோபிடியா 4.4 கோடி சொற்களை கொண்டதாக வெளியானது .இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கட்டுரைகள் இருந்தன . புத்தகவடிவிலும் , இன்டெர்நெட்டிலும் வெளியிடப்பட்டது . எனினும் , இணையதளத்தில் ஒரு சில பகுதிகளை மட்டுமே பார்க்கக்கூடிய அளவில் மட்டுமே வெளியிட்டது .
--தினமலர் . ( 06-12-2008 ) .

No comments: