Wednesday, December 31, 2008

எப்படிப் பட்ட மழை !

இருபத்து நான்கு மணி நேரத்தில்,
2.5 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தால் :அது மிகச் சாதாரண மழை.
7.4மில்லி மீட்டர் வரை பெய்தால்................ :சாதாரண மழை.
7.4--34.9.மி.மீ வரை பெய்தால் .........................:சுமாரான மழை.
35--56.5 மி .மீ வரை எய்தால்.......................... ..:சற்றே கனத்த மழை.
56.6--120 மி.மீ வரை பெய்தால்....................... .:கனத்த மழை.
இதற்கு மேல் பெய்தால்.................................. ...:மிகக் கனத்த மழை என்று சொல்லப்படுகிறது
--கல்கி. 15-10-1978..

Tuesday, December 30, 2008

"C A N C E R "

"Cancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள். அதனால் புற்று நோய்க்கு இந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. இந்த நோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர் ' லிக்டர் கிரப்ஸ்'. கிரப்ஸ் என்றால் ஜெர்மன் மொழியில் நண்டு என்று பெயர்!. எவ்வளவு பொருத்தமான பெயர்.!

Monday, December 29, 2008

மன்னரும் - ராஜ்யமும்.

மன்னர்களுக்கு மன்னனான பேரரசனைக் குறிக்க: கீழ்த் திசை அரசர் சாம்ராட் என்றும், தெற்குத் திசை அரசர் போஜர் என்றும், மேற்குத் திசை அரசர் ஸ்வராட் என்றும், வடக்குத் திசை அரசர் விராட் என்றும், மத்திய அரசர் ராஜா என்றும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்து.
அரச அதிகாரத்தின் பல படிகள்: ராஜ்யம், சாம் ராஜ்யம், பெளஜ்யம், ஸ்வாராஜ்யம், வைராஜ்யம், பாரமஸ்த்யம், மஹாராஜ்யம், ஆதிபத்யம், ஸ்ராவசியம் என்பவை.
-மஞ்சரி . நவம்பர், 1979.

Sunday, December 28, 2008

சூரியன்.

சதபத ப்ராஹ்மணம் என்ற நூலில் 12 மாதங்களுக்குப் பன்னிரு சூரியர்கள் உண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அவர்களாவன :
விவஸ்வான்-, அர்யமா-, பூஷா-, த்வஷ்டா- ஸவிதா- பக- தாதா- விதாதா- வருண - சக்ர - உருக்ரமா - ஸூர்ய.
சூரியனுக்கு உரித்தான அர்க்கபத்ரம் (எருக்க இலை ) விசேஷம் நிரம்பியது. குஷ்டம் போன்ற நோயைத் தீர்க்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு. ரத சப்தமி அன்று இதை உடலில் வைத்து நீராடுவது ஒரு வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. ஆதியில் ஏழே கிரகங்கள்தான் . பிற்பாடுதான் ராகுவும், கேதுவும் சேர்ந்து ஒன்பதாயின.
-அமுதசுரபி. ஜனவரி, பொங்கல் இதழ். 1979.

Saturday, December 27, 2008

'அதமன்-மத்திமன்-உத்தமன்'

வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"
-ஆனந்தவிகடன். 07-01-1979.

Friday, December 26, 2008

பரிவாரத் தலங்கள் !

பரிவாரத் தலங்கள் !
மகாலிங்கம் எனப்படும் திருவிடைமருதூரைச் சுற்றிலும் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அவை:
வினாயகர் - திருவலஞ்சுழி.
முருகன் - சுவாமிமலை.
நடராஜர் - தில்லை (சிதம்பரம் ).
தெட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.
நவக்கிரகம் - சூரியனார்கோயில்.
பைரவர் - சீர்காழி.
நந்தி - திருவாவடுதுறை.
சோமாஸ்கந்தர் - திருவாரூர்.
சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

Thursday, December 25, 2008

எண் விந்தை !

1,2,3,4,5,.....என்று 1000 வரை கூட்டினால் என்ன வரும்?
ஒன்று முதல் ஆயிரம் வரை கூட்டவேண்டும் இல்லையா? ஆயிரத்தில் பாதி எவ்வளவு? 500. சரி இப்போ 1000+1=1001,
999+2=1001, 998+3=1001 என்று யோசிச்சுப் பார்க்கலாம்.இந்த 1001 -ல் ஏதோ சமாச்சாரம் இருக்கிறது. இருக்கட்டும் !
இத்துடன் 500 -ஐ பெருக்குங்கள். அதாவது 1001X500=5005,,00.
-வாசுதேவன், 5-ம் நிலை .மாண்வன்,பெரம்பூர். (தினமணிக்கதிர்.08-07-1990.

Wednesday, December 24, 2008

பரிகார தோஷம் !

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு அதிகாரம் இருக்கிறது . சூரியன் உங்கள் உடல் நலத்துக்கும் , சந்திரன் புகழ் மற்றும் பதவிக்கும் , செவ்வாய் வீட்டுக் கடன் நீக்கத்துக்கும் , புதன் உயர் படிப்பு , கௌரவத்துக்கும் , குரு உயர்ந்த அந்தஸ்த்து , அறிவுத் தன்மைக்கும் , சுக்கிரன் கணவன் - மனைவி நல்லுறவு மற்றும் திடீர் பொருள் வரவுக்கும் , சனி ஆயுள் நிலைப்பாட்டுக்கும் , நாம் செய்யும் சாதனைகளுக்கும் , ராகு சந்ததி விருத்திக்கும் , கேது அறிவு மற்றும் நற்சந்ததிகளுக்கும் உரியவர்களாவர் .அதனால் இவர்களுக்குத் தனித்தனியாக பரிகாரம் செய்வதுதான் நல்லது .
கொடுக்க...
மன்னிப்பை எதிரிக்குக் கொடுங்கள்
பொறுமையை போட்டியாளர்களுக்குக் கொடுங்கள்
மரியாதையை பெரியவர்களுக்குக் கொடுங்கள்
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்குக் கொடுங்கள்
சுய மரியாதையை உங்களுக்குக் கொடுங்கள் !
--அவள் விகடன் . 26-09-2008 .

Tuesday, December 23, 2008

இமயமலை !

இமயமலையின் பனிச் சரிவுகளில் அந்தத் துறவியைச் சந்தித்தான் மலையேறும் வீரன் ஒருவன். ' எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குப் போவதற்கான வழி எது ? ' என்று துறவியிடம் கேட்டான். ' நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்குவதாக இருக்கட்டும். வெகு விரைவில் சிகரம் உன் காலடியில்! ' என்றார் துறவி.
இதுதான் வாழ்கைக்கான எளிய மந்திரம். உங்களின் ஒவ்வொரு சிந்தனையும் செயலும் உங்கள் லட்சியத்தை நோக்கியதாக இருக்கவேண்டும் என்கிறார் ராபின் ஷ்ர்மா. ' தி மான்க் ஹு ஸோல்ட் ஹிஸ் ஃபெராரி ' புத்தகத்தின் மூலம்.
--கி. கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 20-08-2008 ) .

Monday, December 22, 2008

அரிசி .

பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான் . பிரெஞ்சு மொழியில் ரைஸ் ( Riz ) , இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் ( Ris ) ஆங்கிலத்தில் Rice, தமிழிலும் அதே ஒலியோடு அரிசி ! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் -- ரையி !
--ஹாய் மதன். ( 20-08-2008 ) .
' பிறக்கும்போது நான் இந்துவாக பிறந்தது என் குற்றமில்லை; ஆனால்,
நான் இறக்கும்போது ஒருக்காலும் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் !
--அம்பேத்கர் .

Sunday, December 21, 2008

' டார்வின் '

மனிதனின் பரிணாமவளர்ச்சியை ஆய்வு செய்த ' டார்வின் ' 1859 -ம் ஆண்டு இதே நாளில் ( நவம்பர் , 24 ) ' உயிரினங்களின் தோற்றம் ' என்ற அறிவியல் ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார். இங்கிலாந்தில் உள்ள ஷெர்வ்ஸ்பரி என்ற இடத்தில் 1809 -ம் ஆண்டு பிப்ரவரி 9 -ம் தேதி சார்லஸ் ராபர்ட் டார்வின் பிர்ரந்தார். சிறுவயதில் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார். 1958 -ம் ஆண்டு ஜூலை 20 -ம் தேதி முதல் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொகுத்து புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் ' உயிரினங்களின் தோற்றம் ' என்ற பெயரில் 1859 -ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இது இயற்கை அறிவியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. மனித இனம் குரங்குடன் தொடர்புடையது என்று அவர் கூறிய கருத்து அப்போது மதரீதியாக பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் வந்தஆராய்ச்சியாளர்கள் குரங்கில் இருந்துதான் மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றது என்று உறுதிசெய்தனர்.
-தினமலர் . ( 24-11-2008 ) .

மரணத்துக்குப் பிறகு !

மரணத்துக்குப் பிறகு மனிதனின் கதியை, அவனிடம் இருந்த சத்வ ( சாந்தம் ), ரஜோ ( மூர்க்கம் ), தமோ ( சோம்பல் ) என்ற மூன்று குணங்களின் செயல்பாடுகளே நிர்ணயிக்கின்றன !
-- குணத்ரய வியாக யோகம் ( கீதை
--ஆனந்தவிகடன். (17-09-2008 )

Saturday, December 20, 2008

எய்ட்ஸ் !

எந்த ஒரு திருப்புமுனையையும் யாருமே கவனிக்காத மிகச் சின்னதொரு சம்பவம்தான் துவக்கிவைக்கும். இதற்கு மிகச் சிறந்த ( ! ) உதாரணம் எய்ட்ஸ் !
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஆதிவாசி உடலில் தொற்றிய எய்ட்ஸ் கிருமி , இன்று உலகையே ஆட்டிப் படைக்க எடுத்துக்கொண்ட காலம் மிக மிகச் சொற்பம். ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் பல்வேறு மாகாண மருத்துவமனைகளுக்கு வித்தியாசமான பாலின நோயுடன் வந்த நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அது எய்ட்ஸ் என்று தெரியவர, 'அமெரிக்காவில் எய்ட்ஸ் கிருமி நுழைந்தது எப்படி?' என்று ஆராய்ந்தார்கள். சில நூறு நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆப்பிரிக்காவில் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு கை நிறைய பணத்தையும், உடல் நிறையக் கிருமிகளையும் சுமந்து வந்ததுதான் காரணம் என்று கண்டுபிடித்தனர். அமெரிக்காவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது அந்த நூறு ஊழியர்கள் , ஆயிரம் டன் சர்க்கரையின் ஒரு துகள் !.
--கி.கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 17-09-2008 ).

Friday, December 19, 2008

நஷ்டம் !

போதும் என்று திருப்தியடையாத அந்தணர்கள் நஷ்டத்தை அடைவார்கள்.
போதும் என்ற மனப்பான்மையுடைய அரசன் கஷ்டத்தை அடைவான்.
நாணத்துடன் கூடிய விலைமகள் நஷ்டத்தை அடைவாள்.
நாணமில்லாத குலமகள் நஷ்டம் அடைவாள்.
பொறாமையுள்ளவன் வளர்ச்சியடைய மாட்டான்.
பொறுமையுள்ள படை வீரன் பெருமையடைய மாட்டான்.

-வாரியார் சுவாமிகள்.

Thursday, December 18, 2008

மூவகை மனிதர்கள் !

1) விளாம்பழ மனிதன்:_ விளாம் பழத்தில் முக்கால் பகுதி ஓடும், கால் பகுதி பழமும் இருக்கும் முக்கால் பகுதி தனக்கும் கால் பகுதி பிறருக்கும் வாழ்வான் மனிதன்.
2) வாழைப் பழ மனிதன்:_ இம்மனிதன் தனக்கென்று கால் பகுதியும் (தோல் 1/4 பகுதி ) மீதி 3/4 பகுதி ( பழம் ) பிறருக்கும் பயன்படுவான்.
3) கொய்யாப் பழ மனிதன்:_இப்பழம் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதது போல் இவ்வகை மனிதனும் அப்படியே. !
_குமரி அனந்தன். சாவி 15-04-1984.

நம்பிக்கை !

நம்பிக்கை !
ஏகாதசியில் மரணம் அடைந்து, துவாதசியில் தகனம் நடந்தால் மோக்ஷம் அடையலாம் என்று கூறப்படுகிறது .காரணம் ஏகாதசியின்
தேவதை_ யமன், துவாதசியின் தேவதை _விஷ்ணு .எனவேதான் இந்துக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை உள்ளது.
_தினமணி கதிர். 17- 06-1984.

Wednesday, December 17, 2008

பிள்ளையார்

"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது !"
சாதாரணமாக ஒவ்வொரு தமிழ் வருஷத்திலும், ஆவணி மாதம் வரும் சுக்கில சதுர்த்தியில் பிள்ளையார் பூஜையைத் துவக்கி ,அந்த ஆண்டு இறுதியில் ஸ்ரீ ராம நவமிக்குப் பின் வரும் ஹனுமந்த ஜெயந்தி வரை,நமது சாஸ்திரங்களும், புராணங்களும் எடுத்துக் காட்டும் தெய்வங்களெல்லாம் ,அந்தந்தத் தினத்தில் பூஜை செய்து வழிபடுகிறோம்.ஹனுமந்த ஜயந்தி முடிந்ததும் மூன்று நான்கு மாதங்கள் ரெஸ்ட் ! இதைத் தான் 'பிள்ளையாரில் ஆரம்பித்து குரங்கில் முடிக்க வேண்டும் ' என்று கூறியுள்ளார்கள்.

Tuesday, December 16, 2008

'குரான்'

இஸ்லாமியர்களின் வேதப்புத்தகமான 'குரானில்' முதல் அத்தியாயம் 'மாடு' என்று தொடங்குகிறது. கடைசி அத்தியாயம் 'மனிதன்' என்று முடிகிறது.
_கல்கண்டு (21-06-1984 ) .

Monday, December 15, 2008

கிராமம்_மணி நேரம்.

கிராமங்களில் உள்ள தொழிலாள்ர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ளபறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்
கரிச்சான் குருவி சப்திக்கும் நேரம் _3 மணி.
செம்போத்து ............................................._3-30 மணி
குயில்..........................................................._4-00 மணி.
சேவல்.........................................................._4-30 மணி.
காகம்............................................................_5-00 மணி.
மீன் கொத்தி..............................................._6-00 மணி.
_தினமணிகதிர் ( 17-06-1984 ).

Sunday, December 14, 2008

பிராதக் காலம்.

ஸூர்யோதயத்துக்கு முந்தைய 3 3/4 நாழிகைக்குப் (ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம் ) பிராதக் காலம் என்று பேர்.அருணோதயம் என்றும் சொல்வதுண்டு. அந்தக் காலத்தில் பச்சை ஜலத்தில் குளிப்பதற்கு பிராதஸ்னானம் எனறு பெயர்.
'பெய்_பாய்_காய்'
கேரளம்_'பெய்து விளையும் பூமி'
தஞ்சாவூர்_'பாய்ந்து விளையும் மண்'
இராமநாதபுரம்_'காய்ந்து விளையும் நிலம்'
பிடிபடுதல் !
மான் சப்தத்தினாலும், யானை ஸ்பரிசத்தினாலும், வெட்டுக் கிளி ரூபத்தாலும், மீன் ருசியாலும், வண்டு வாசனையாலும் பிடி படுகிறது.
_விவேக சூடாம்ணி. (ஞானபூமி. ஆகஸ்ட். 1984.

டிசம்பர் -- 14 .

-- 1799 அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் தனது 67 வது வயதில் இறந்தார் .

Saturday, December 13, 2008

சிரிப்போ சிரிப்பு !

சிரிப்போ சிரிப்பு !
கணவன்: "உங்க அப்பா சரியான முட்டாள்னு இப்பத்தான் புரியுது...! "
மனைவி: "Too Late....என்னிக்கு உங்களை எனக்கு நிச்சயம் பண்ணினாரோ அன்னிக்கே எனக்குப் புரிஞ்சுப் போச்சு...!"
துணிக்கடையில்: "என்ன துணி காட்ட..? டு பை டு காட்டவா...?"
"வேண்டாம் ! ஒன் பை ஒன்னா காட்டுங்க !"
"உங்க பெண் ரொம்ப வெட்கப் படராளே....அவ பேரு என்ன...?"
"அவ பேரு'ஷை'லஜா !"
ஒரு ரோடில் போய்க் கொண்டிருந்த ஒரு மாட்டைப் பிடித்து அதன் கொம்புகளை அறுத்துவிட்டார் ஒரு போலீஸ்காரர் .ஏன் தெரியுமா?
அது 'NO HORN AREA '.
"நீ சரியான நாலப்பர்..."
"அப்படீன்னா...?
"எட்டப்பரில் பாதி ..."
"ஏண்டா A..B...C...D...எழுதச் சொன்னா, Q விற்குப் பிறகு ஏன் எழுதாமல் நிறுத்திட்டே?"
"அதுதான் Qஆச்சே...! நகர்ந்த அப்புறம் தானே எழுத முடியும் !"

டிசம்பர் -- 13 .

-- 1764 ம் ஆண்டு ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் இறந்தார் .

ராஜ நீதி !

'ஒன்றினால் இரண்டை அறிந்து, நான்கினால் மூன்றை வசம் செய்து, ஐந்தை வென்று,ஆறினைக் கற்று, ஏழை விட்டு விட்டுச் சந்தோஷமாய் இரு...'
மஹாபாரதத்தில் பிரஜாசுர பர்வத்தில் விதுர நீதியில், ராஜனீதீயோடு பரிபாலனம் செய்ய வேண்டிய ஓர் அரசனுக்குப் பொருந்துமாறு சொல்லப்பட்ட சுலோகத்தின் கருத்து இது.
1) புத்தி- 2) சரி,தவறு -3) நண்பன், விரோதி, நடுனிலையாள்ர் 4) சாம, தான, பேத, தண்டம் 5) ஐம்புலன், 6) விரோதிகளையும் அவர்கள் படைகளையும் பற்றிய உடன்படிக்கை, யுத்தம், போர் நடப்பு, விரோதிகளில் எதிர்ப்பில் திடமாக இருத்தல், அவசியம் இருந்தால் செய்ய வேண்டிய இருதரப்பு நடவடிக்கை, சமாதானம்- 7) பெண், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, தகாத வார்த்தைகள்,கோரமான தண்டனை, பண விரயம்.
_ஆனந்த விகடன். 14-10-1984.

Friday, December 12, 2008

'கம்' என்று இரு '

வினாயகரின் மகிமையை உலகில் வழங்கும் ஒரு பழமொழியிலிருந்தே உணரலாம்.
நீ 'கம்' என்று பேசாமல் இருந்தாலே எல்லாம் சரியாக நடைபெறும் என்று சொல்வது வழக்கம். அதற்குப் பொருள் 'கம்' என்ற பீஜாக்ஷ்ரத்தை ஜபித்தால் அவர் எல்லாக் காரியத்தையும் நடத்திக் கொடுப்பார் என்பதாகும்..
-ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம். ஆகஸ்ட் 1984.

Thursday, December 11, 2008

டிசம்பர் --11 .

-- கி.பி. 375 வது ரோமாபுரி அரசரான நீரோ மன்னர் பிறந்தார் .
-- 1847 ம் ஆண்டு 1200 க்கும் மேலான கண்டுபிடிப்புகான மனித் இனத்திற்குத் தந்த அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் பிறந்தார் .
-- 1832 ம் ஆண்டு பாரீஸ் நகரத்தின் புகழ் பெற்ற ஈபில் கோபுரத்தை உருவாக்கியவரும் , அமெரிக்காவில் உள்ள சுதந்திர சிலையை உருவாக்கியவருமான அலெக்ஸாண்டர் குஸ்டன் ஈபில் பிறந்தார் .
-- இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் விஸ்வனாதன் ஆனந்த் 1969 ம் ஆண்டு பிறந்தார் .

" 40 நாள் விரதம் "

40 நாள் விரதம் ( ஒரு மண்டலம் ) என்பது முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் நமது சித்தர்களால் தோற்றுவிக்கப் பட்டது. அதாவது வளர் பிறையில் 15 திதிகளும் ,தேய் பிறையில் 15 திதிகளும் சேர்ந்து திதிகள் 30. நட்சத்திரங்கள் 27 -ம் இந்த திதிகளில் அடங்கும். மேலும் மனிதனை ஆட்கொள்ளும் நவக் கிரகங்களையும் கணடனர். ஆக்வே திதிகள் -30 , கிரகங்கள் -9, ஆரம்ப நாள் -1 , முடிக்கும் நாள்-1 என 41 நாட்களாக அமைத்தனர்.

Wednesday, December 10, 2008

நோபல் பரிசு !

அறிவியல் , வேதியல் , மருத்துவம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு 1901 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 -ம் தேதி முதல் , நோபல் பரிசுகள் வழங்கும் நடைமுறை தொடங்கியது .
சுவீடன் தலைநகரில் ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் நோபல் என்பவரின் 3 -வது மகனாக ஆல்பிரெட் நோபல் 1833 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் தேதி பிறந்தார் . தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி 5 துறைகளை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் தர வேண்டும் என்று 1895 -ம் ஆண்டு நவம்பர் 27 -ம் தேதி உயில் எழுதிவைத்தார் .இதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து 1896 டிசம்பர் 10- ம் தேதி ஆல்பிரெட் நோபல் இறந்தார் .
-- தினமலர் . ( 10-12-2008 ) .
அறிவியல் , வேதியல் , மருத்துவம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு 1901 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 -ம் தேதி முதல் , நோபல் பரிசுகள் வழங்கும் நடைமுறை தொடங்கியது .
சுவீடன் தலைநகரில் ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் நோபல் என்பவரின் 3 -வது மகனாக ஆல்பிரெட் நோபல் 1833 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் தேதி பிறந்தார் . தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி 5 துறைகளை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் தர வேண்டும் என்று 1895 -ம் ஆண்டு நவம்பர் 27 -ம் தேதி உயில் எழுதிவைத்தார் .இதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து 1896 டிசம்பர் 10- ம் தேதி ஆல்பிரெட் நோபல் இறந்தார் .
-- தினமலர் . ( 10-12-2008 ) .

டிசம்பர் -- 10 .

-- 1896 -ம் ஆண்டு இதே நாளில் புகழ் பெற்ற நோபல் பரிசை நிறுவியவரான ஆல்பிரட் நோபல் தனது 63-வது வயதில் காலமானார் .
-- நோபல் பரிசு பெற்ற மிக இளையவர் எனும் பெருமையை டாக்டர் மார்டின் லூதர் கிங் 1964-ம் ஆண்டு பெற்றார் .

முசோலினி !

உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் தோளோடு தோள் நின்றவர் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி .
போரில் முசோலினி தோற்ற பிறகு , முசோலினி ஒரு வேனில் ஏறிக்கொண்டு எல்லையைக் கடந்து தப்பிக்க முயன்றார் . அவரோடு இணைபிரியாத காதலி க்ளாரா பெட்டாசி !
1945-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அதிகாலையில் முசோலினியின் வேன் ஊர் எல்லையைத்தாண்ட முயன்றபோது அவருக்கு எதிரான புரட்சிப் படையினரால் வேன் தடுத்து நிறுத்தப்பட்டது . புரட்சிப் படையின் இளம் வீரர்கள் நுசோலினியைத் திகைப்போடு அடையாளம் கண்டு கொண்டார்கள் .
இருவர் வேனுக்குள் ஏறி முடங்கி , நடுங்கி அமர்ந்திருந்த முசோலினியைக் காதலியோடு கீழே இழுத்துக்கொண்டு வந்தனர் . ' இவனைக் கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்துவிடலாம் ' என்று சிலர் சொன்னார்கள் . ' நோ !' இங்கேயே தீர்த்துக் கட்ட வேண்டும் ' என்றார்கள் பலர் .
முடிவு நெருங்கிவிட்டதைப் புரிந்து கொண்ட முசோலினி மண்டியிட்டு , ' என்னைக் கொல்லாதீர்கள் ...' என்று கெஞ்சிக் கதற ஆரம்பித்தார் . அவருடைய கால்சராய் சிறுனீரால் ஈரமானதாகத் தகவல்.....
எதிரே நின்ற இளைஞர்களின் கைத் துப்பாக்கிகள் நிமிர்ந்தன . மண்டியிட்டிருந்த முசோலினி , அவருடைய காதலி இருவருடைய உடல்களும் சல்லடையாக்கப்பட்டு மல்லாக்க விழுந்தன .
பிற்பாடு அவர்களுடைய உடல்களைக் கொண்டு சென்று , மிலான் நகரின் பிரதான வீதியில் நட்ட நடுவே போட்டார்கள் . பல்லாயிரக்கணக்கான இத்தாலிய மக்கள் மௌனமாக உடல்களை வெறித்துப் பார்க்க....
திடீரென்று ஒரு சாமான்யப் பெண் , முசோலினியின் உடலருகே வந்து ' தூ ' என்று துப்பினாள் . பிறகு , பல பெண்கள் நெருங்கிச் சென்று துப்பிவிட்டு , முசோலினியின் உடலை எட்டி உதைத்தனர் . சில இளைஞர்கள் உடல்மீது சிறுநீர் கழித்தார்கள் .
இருவருடைய உடல்களும் இழுத்துச் செல்லப்பட்டு , ஒரு பெற்றோல் பங்க் வாயிலில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டன . கிளாரா பெட்டாசியின் பாவாடை கீழ்னோக்கித் தொங்கியதால் , அவளுடைய தொடைப்பகுதியும் உள்ளாடையும் தெரிய.... பரிதாபப்பட்ட ஒரு இளைஞர் , கம்பத்தின்மீது ஏறி பாவாடையைச் சரிபடுத்தி , ' பின் ' ஒன்றைப் பொருத்திவிட்டு இறங்கினார் .
லேட்டாகத்தான் முசோலினியின் இந்தக் கொடூரமான முடிவு ஹிட்லருக்குத் தெரியவந்தது . ஹிட்லர் உடல் நடுங்கியது .
--மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் ! என்ற நூலில்

டிசம்பர் -- 9 .

டிசம்பர் -- 9 .
-- 1608 -ல் பிரபல ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் பிறந்தார் .

Tuesday, December 9, 2008

பெரியம்மை நோய் !

பெரியம்மை நோய் !
பெரியம்மை நோயை முற்றிலும் ஒழித்துவிட்டதாக 1979 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 -ம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது .
பெரியம்மை நோய் 15-ம் நூற்றாண்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது . ' வைரோலா ' என்ற வைரஸ் கிருமியால் பெரியம்மை பரவுகிறது . இந்த நோய் தாக்குவதால் மனிதர்கள் தோல் மற்றும் வாய் , தொண்டை பகுதியில் சிறிய கட்டிகள் தோன்றுகின்றன .ஒரு மனிதருக்கு இருக்கும் பெரியம்மை கிருமிகள் அவர் அருகில் இருக்கும் பலருக்கும் தொற்றுகிறது .
-- தினமலர் . ( 09-12-2008 ) .

சூரிய பகவான் !

வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய அம்சங்களை பலனாகத் தருகிற சக்தியை நவநாயகர்கள் தங்கள் வசம் வைத்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன . நவக்கிரகங்கள் என்று சொல்லப்படுகிற அந்த ஒன்பது பேரில் முதலாவதாக மட்டுமல்ல...நம் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருப்பவர் சூரிய பகவான் ! ' சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு ' என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன .பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து தனது ஒளிக்கற்றைகளை மருந்தாக அனுப்பி நம்மைக் காக்கும் வல்லமை பெற்றவர் சூரிய பகவான் .காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில் , சிறிது நல்லெண்ணெய உடல் முழுவதும் தடவிக் கொண்டு , ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக ந்ம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும் . உடலும் மனமும் புத்துணர்வு பெறுவதுடன் நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக்கும் . இதைத்தான் ' சூரியக் குளியல் ' என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள் .நம் சிக வாழ்வுக்காக சூரியனை வணங்கி ஆராதிப்பதால் பிரம்மா , விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறுகிறோம் .
நமது இந்த சூரிய வழிபாட்டைப் போன்றே ' சௌரம் ' என்ற வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் , ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் க்ப்ள்கின்றனர் .
நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல் , நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும் , பூப்படையாத பெண்களும் , முக்கியமாக கண் பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது .
--குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் . (05-12-2008 ) .

யார் எப்படி பேசுவார்கள்..

கிரிக்கெட் வீரர் --ஓவரா பேசுவார் .
போட்டோகிராபர் -- டெவலப் பண்னி பேசுவார் .
ரவுடி -- அடிச்சுப் பேசுவார் .
ஹோட்ட்ல் சர்வர் --' சூப்'பரா பேசுவார் .
வக்கீல் -- ' மெய் ' மறந்து பேசுவார் .
ஃபாஸ்ட் ஃபுட் ஓனர் -- காரசாரமா பேசுவார் .
பூக்கடைக்காரர் -- வார்த்தையை அளந்து பேசுவார் .
டயட்டீஷியன் -- உப்பு சப்பில்லாமல் பேசுவார் .
--அவள் விகடன் . ( 05-12-2008 ) .

Monday, December 8, 2008

கொடி நாள் !

டிசம்பர் . -- 7 .
நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் க்ண்னாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .இதயடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .
அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .
அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன .ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .
--தினமலர் . ( 07-12-2008 ) .

விலங்குகள் - சங்கீதம் !

விலங்குகள் - சங்கீதம் !
விலங்குகள் எழுப்பும் ஒலிகளுக்கும் நமது சங்கீதத்துக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள்...
ஏழு ஸ்வரங்கள் விலங்குகளின் ஒலி
சட்ஜமம் -- மயில்
ரிஷபம் -- மாடு
கந்தாரம் -- ஆடு
மத்திமம் -- அன்றில் பறவை
பஞ்சமம் -- குயில்
தய்வதம் -- குதிரை
நிசாதம் -- யானை .
--அவள் விகடன் . ( 05-12-2008 ) .

டிசம்பர் -- 7 .

-- இந்திய கொடி தினம் .
-- 1782 -ம் ஆண்டு இதே தினத்தில்தான் இந்திய வரலாற்றில் புகழ் பெற்ற மன்னரான ஹைதர் அலி காலமானார் .
-- 1941 அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின்மீது ஜப்பான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தினர் .
-- 1995 இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் 1 சி பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டது .

Sunday, December 7, 2008

'கலைக்களஞ்சியம் '

( 06 -12 - 1768 )
அறிவு புரட்சிக்கு வித்திட்ட என்சைக்கிளோபிடியா என்ற கலைகளஞ்சிய தொகுப்பின் முதல் பதிப்பு 1768 -ம் ஆண்டு இதே நாளில் வெளியானது .ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவை சேர்ந்த ஆதம் மற்றும் சார்லஸ் பிளாக் என்பவர்கள் இணைந்து , பொது அறிவை இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலான ' கலைகளஞ்சியம் ' ( என்சைக்கிளோபிடியா ) வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டனர் .
ஒரு வார்த்தையை பற்றி அல்லது ஒரு பொருள் பற்றி , மாநிலம் , நாடு பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக்கித் தருவதுதான் இதன் நோக்கமாக இருந்தது .இதற்காக பிரிட்டானிக்கா என்சைக்கிளோபிடியா என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது .
சுவிஸ் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் மற்றும் நடிகர் ஜேக்கியூ சாப்ரா என்பவர்தான் என்சைக்கிளோபிடியா வெளியிடும் , என்சைக்கிளோபிடியா பிரிடானிக்கா நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளராவார் .
2004-ம் ஆண்டு என்சைக்கிளோபிடியா 4.4 கோடி சொற்களை கொண்டதாக வெளியானது .இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கட்டுரைகள் இருந்தன . புத்தகவடிவிலும் , இன்டெர்நெட்டிலும் வெளியிடப்பட்டது . எனினும் , இணையதளத்தில் ஒரு சில பகுதிகளை மட்டுமே பார்க்கக்கூடிய அளவில் மட்டுமே வெளியிட்டது .
--தினமலர் . ( 06-12-2008 ) .

Saturday, December 6, 2008

' விலைவாசி பஞ்ச் '

விலைவாசி ஏறுது ராக்கெட்ல...
ஷேர் இறங்குது மார்கெட்ல...
பணம் இல்ல பாக்கெட்ல...
துண்டு விழுது பட்ஜெட்ல !
அன்று சுகவாசி...
இன்று சன்யாசி...
காரணம் விலைவாசி !
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி விலைவாசி !
ஆக முடியுமா ?
இந்தியாவின் பெருமை
சந்திராயன் ராக்கெட் !
இந்தியாவின் சிறுமை
விலைவாசி ராக்கெட் !
கல்யாணம் , காது குத்துக்கு
லோன் போட்டோம்
அந்தக் காலம் !
காய்கறி வாங்க லோன்
கேக்கறோம் இந்தக் காலம் !
--அவள் விகடன் . ( 05-12-2008 )

Friday, December 5, 2008

எட்டுவகையான திருமணங்கள் !

எட்டுவகையான திருமணங்கள் !
1) பிராம்மம்: தாய் தந்தையர் சாலங்கிருத கன்னிகாதானம் செய்து கொடுப்பது.
2) தைவம் : யாகத்தின் முடிவில் யாகம் செய்யும் ஆச்சாரியனுக்குக் கன்னியை தானம் செய்வது.
3) ஆரிஷம்: வரனிடமிருந்து 2 பசுக்களை வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தருவது.
4) பிரஜாபத்யம்: இருவரும் சேர்ந்து தருமம் செய்யட்டும் என்று மனத்தால் தானம் செய்து விட்டு விடுவது.
5) ஆசுரம்: மிகுந்த பொருளை வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தருவது.
6) காந்தர்வம்: கன்னிகையும் வரனும் தனியே மனம் இசைந்து கலந்து கொள்வது.
7) இராக்கதம்: வலிமையால் போரிட்டுக் கன்னிகையைக் கொண்டு போவது.
8) பைசாசம்:.
-கிருபானந்தவாரியார், ( பாரதப்பெருங்காவியம் )

Thursday, December 4, 2008

மும்பை...

26-11-2008 .மும்பையில் கடந்த 26 முதல் 29-ம் தேதிவரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் .
மும்பைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் தவராமல் பார்ப்பது சில இடங்களை.....
அதில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் மூன்று....
ஒன்று கேட்வே ஆப் இந்தியா , நரிமன் பாயிண்ட் , வி . டி .ரயில்வே நிலையம் .
இந்த முன்று இடங்களையும் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம்
சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் , தவறாமல் பார்ப்பது இந்தியாவின் நுழைவு வாயிலில் கேட்வே ஆப் இந்தியாவை .அதை ரசிக்கும் பலர் கடலுக்குள் படகு மூலம் ஒரு ரவுண்ட் சென்று வருவர் . அப்படிச் செல்லும்போது கடலுக்குள் இருந்து பார்க்கும் போது தெரியும் தாஜ் ஓட்டலின் அழகே தனி . மும்பைக்கு அதுதான் தாஜ்மஹால் . 100 வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ள ஓட்டல் . உலகிலேயே அதிக புகைப்படம் எடுக்கப்பட்ட ஓட்டல்களில் இது முதலிடம் வகித்தாலும் ஆச்சர்யமில்லை . அவ்வளவு பேர் அதை புகைப்படம் எடுத்திருப்பார்கள் . இந்தியாவில் உள்ள தாஜ் ஓட்டல்கள் அனைத்தும் டாடாவிற்கு சொந்தமானவை . ஒரு முறை ஜாம்ஜெட்ஜி டாடா வெளினாட்டில் வாட்சன் ஓட்டலில் சென்று ரூம் கேட்டபோது அவருடைய தோலின் நிறத்தை ( கருப்பர் ) பார்த்து ரூம் இல்லை என்று சொல்லப்பட்டது . ( வள்ளல் அழகப்ப செட்டியார் மும்பை வந்திருந்தபோது , ரிட்ஜ் ஓட்டலில் ரூம் இல்லை என்று மறுக்கப்பட்டபோது , ' உங்களது ஓட்டல் என்ன விலை ?, ஒரே செக்கில் கொடுத்துவிடுகிறேன் ' என்று சொன்னார் என்பது வரலாறு ).
அந்த வெளிநாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்பியதும் மும்பையில் ஒரு ஓட்டல் கட்டவேண்டும் என்று எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் ' தாஜ் ஓட்டல் ' . அந்த தாஜில் தங்குவதற்கு கட்டணங்கள் அதிகம் . ஒரு இரவுக்கு ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் .
அந்த புராதன தாஜ் ஓட்டலின் மேல் பகுதியில் ஒரு டோம் உள்ளது .( கோயிலின் கோபுரம் போன்று உள்ள பகுதி ) அங்கு உள்ள பிரசிடன்சியல் சூட் தான் உலகத்திலேயே அதிக கட்டணங்கள் உள்ள ரூம்களில் ஒன்று . நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் கட்டணம் . அந்த டோம் தீவிரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்தபோது பலரின் மனதும் பதறிதுடித்தது என்னவோ உண்மைதான்
--தினமலர் . ( 03-12-2008 ).

Wednesday, December 3, 2008

'பதினெட்டு ஸித்திகள் !'

1) அணிமா சித்தி.
2) லகிமா .
3) மகிமா.
4) ஈசக்தவ.
5) ரசித்வ.
6) ப்ராகாம்ய.
7) புத்தி.
8) இச்சா.
9) ப்ராப்தி.
10)ஸர்வகாம.
11) ஸர்வஸம்பத்ப்ரத.
12) ஸர்வ ப்ரியம்கர.
13) ஸர்வ மங்கள காரண.
14) ஸர்வ துக்கவிமோசன.
15) ஸர்வ ம் ருக்யுப்ரசமண.
16) ஸர்வ விக்னனிவாரண.
17) ஸர்வாங்க ஸுந்தர.
18) ஸர்வ லெளபாக்ய தாயக.

Tuesday, December 2, 2008

உங்கள் வயதை அறிய வேண்டுமா ?

பெரும் பாலான இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் கைகொண்டுள்ள முறை இது. தற்போது உங்களுக்குள்ள வயதை 80- லிருந்து கழியுங்கள்,அந்த மிச்சத்தை 7-ஆல் பெருக்குங்கள், அந்தத் தொகையை 10-ஆல் வகுங்கள். கிடைக்கும் விடைதான் உங்கள் மீதி வயதின் உத்தேச மதிப்பு.
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது !"
சாதாரணமாக ஒவ்வொரு தமிழ் வருஷத்திலும், ஆவணி மாதம் வரும் சுக்கில சதுர்த்தியில் பிள்ளையார் பூஜையைத் துவக்கி ,அந்த ஆண்டு இறுதியில் ஸ்ரீ ராம நவமிக்குப் பின் வரும் ஹனுமந்த ஜெயந்தி வரை,நமது சாஸ்திரங்களும், புராணங்களும் எடுத்துக் காட்டும் தெய்வங்களெல்லாம் ,அந்தந்தத் தினத்தில் பூஜை செய்து வழிபடுகிறோம்.ஹனுமந்த ஜயந்தி முடிந்ததும் மூன்று நான்கு மாதங்கள் ரெஸ்ட் ! இதைத் தான் 'பிள்ளையாரில் ஆரம்பித்து குரங்கில் முடிக்க வேண்டும் ' என்று கூறியுள்ளார்கள்.

Monday, December 1, 2008

ஹிட்லரின் உயில் !

வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்த ஹிட்லர் திடீரென்று " கோய பெல்ஸ் ....என் உயிலை டிக்டேட் பண்ணப் போகிறேன்....எழுதிக் கொள்ளுங்கள்..." என்றார் . கலங்கியவாறு நின்ற கோயபெல்ஸ் அதற்குத் தயாரானார். ஹிட்லர் சொல்ல ஆரம்பித்தார்:
" இத்தனை காலப் போராட்டத்தின் இடையில் திருமணம் என்கிற பொறுப்பையும் என்னால் ஏற்க முடியாமல் போனது. எனக்காகவே வாழ்ந்து , கடைசிவரை என்னைப் பிரியாமல் துணைநிற்கும் ஈவாவை -- இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்வதற்கு முன்பு -- திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். ஈவா அவளாகவே என்னிடம் வந்தாள் . என் சுக துக்கங்களில் பங்கு கொண்டாள். என்மீது அவள் வைத்திருந்த காத்ல் ஆச்சரியமானது. என்னோடு தானும் இறக்கவேண்டும் என்பது அவள் விருப்பம். மக்களுக்காகவே என்னை அர்பணித்துக்கொண்ட நான் அவளுக்கு என்று எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. மரணத்தையாவது நாங்கள் கைகோத்து ஒன்றாக சந்திக்கிறோம் ." என்று முடித்தார்.
பெருமிதத்துடனும், வேதனையுடனும், விம்ம ஆரம்பித்தார் ஈவா ப்ரான்.!.
--மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் . என்ற நூலில்.