Wednesday, November 12, 2008

வாழைப் பழம் !

தெய்வங்களுக்கு படையல் அல்லது நெய்வேத்தியம் செய்யும் போது ,நாம் பெரும்பாலும் வாழைப் பழங்களில், பூவன் வாழைப் பழ்த்தையே வைத்து செய்கிறோம்.அதைப் போல நாம் செய்யக் கூடாது. பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்குத த்னித் தனியே பழங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துத் தான் நாம் படையல் அல்லது நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.பிரும்மா_பூவன் வாழைப் பழம். (பூவன்-பூவின் மேல் இருப்பவன். )விஷ்ணு _முகுந்தன் வாழைப் பழ்ம். (விஷ்ணுவிற்கு ,முகுந்தன் என்ற பெயரும் உண்டல்லவா, அதனால் மொந்தம் பழம் என்று பழக்கத்திலுள்ள முகுந்தன் வாழைப் பழ்ம் ).சிவன் _பேயன் வாழைப் பழம் ( பேயன் என்று சிவனுக்கு வேறு பெயர் உண்டு. ஆகவே சிவனுக்கு உகந்தது பேயன் வாழைப் பழம்.). _காலஞ்சென்ற என் தாய் மாமன். வித்வான்.பொன்.முருகையன்.சொல்லக்கேட்டது.அவருக்கு இன்று 16-ஆம் நாள் காரியம்.

No comments: