Saturday, November 29, 2008

ரத்தம் !

ரத்தம் என்பது இயற்கை உருவாக்கிய ஒரு பேராச்சரியம் ! உயிரிருக்கும் வரை உடலுக்குள்ளே ஓடும் ஜீவநதி அது. கடைசி மூச்சும் , இதயத்துடிப்பும் நிற்கும் வரை உள்ளே இந்த நதி சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
உடலுக்குள்ளே கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கும் ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் மைல்கள். இது பூமியின் நான்கு மடங்கு சுற்றளவு.
மனித உடலிலுள்ள ரத்தம் ( மற்றுமுள்ளப் ) பற்றிய ஆராய்ச்சிக்கு ' ஸராலஜி ' என்று பெயர். 'ஸர ' என்கிற சமஸ்கிருத வார்த்தயிலிருந்து வந்தது இது. ' ஸர ' என்றால் ஓடுவது, -- to flow என்று அர்த்தம்.
ரத்தத்துக்கு இரு ' முகங்கள் ' உண்டு ! ஒன்று -- அது மருத்துவர்களுக்குக் காட்டும் ( நமக்கு ஓரளவுக்குத் தெரிந்த )முகம். மற்றது -- போலீஸுக்குக் காட்டும் முகம் !
-- மதன். மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில் .

No comments: