Thursday, November 27, 2008

தேனீக்கள் !

சொகுசாயிருக்கும் ராணித்தேனீயைவிட ,பறந்து பற்ந்து தேன் சேகரிக்கும் வேலைக்காரத் தேனீக்கள் தான் இரக்கத்திற்குரியவை .ஆனால் , ராணித்தேனீயும் அனுதாபத்திற்குரியதுதான் . பல ஈக்கள் போட்டியிட்டு ஒரே ஓர் ஆண் தேனீதான் ராணித்தேனீயைக் கூடுகிறது . உறவு முடிந்ததும் ஆண் தேனீயின் ஆண் குறி உடைந்து ராணித்தேனீயின் பெண் புழையை முற்றிலுமாய் மூடிவிடுகிறது . அதன்பிறகு எந்தத் தேனீயும் ராணித்தேனீயை புணர முடியாது .
அது ஒரு முறை உள்வாங்கிய இந்திரியத்தில்தான் காலந்தோறும் கருத்தரித்து முட்டையிட்டுக் கொண்டேயிருக்கிரது .தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் உடலுறவுக்கு அனுமதிக்கப்பட்ட ராணித்தேனீயும் அனுதாபத்திற்குரியதுதான். அதைவிட அனுதாபத்திற்குரியது அதைப் புணர்ந்து முடித்ததும் ஆண்குறி உடைந்து அப்போதே செத்துப் போகிற ஆண்தேனீ ,
இயற்கையில்தான் எத்தனை விசித்திரங்கள் .
--வைரமுத்து . குமுதம் . ( 19-12-2007 ) .

No comments: