Wednesday, November 26, 2008

இடி - மின்னல் !

மழை பெய்யுமா , வெயில் அடிக்குமா எனக் கணிக்க இயலாத நிச்சயமற்ற வானிலை சில சமயம் நிலவும் . குளிர்ச்சியான காற்று உங்கள் உடம்பைத் தழுவிச் செல்கிற அந்த க்ளைமேட்டில் , பூமியிலிருந்து காற்று மேலே எழும்பும் . நல்ல ஈரப்பதம் உள்ள காற்று மேலெழும்ப அதற்கு ஒரு சக்தி வேண்டும் . அந்த சக்தி வெளியில் கிடைக்காதபோது , உள்ளுக்குள் இருந்தே எடுத்துக்கொள்ளும் . அப்போது ஈரப்பதமான காற்று குளிர்ச்சி அடைந்து திரள் மேகங்கள் ( நீர்த் துளிகள் ) உருவாகும் .
அவை மேலே போகும்போது ஏற்கனவே அங்குள்ள திரள் மேகங்களுடன் உராயும் . அப்போது , ஒருவித மின்புலம் உண்டாகும் . அந்தச் சமயத்தில் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு வெப்பம் உருவாகும் . இந்த அளவுக்கான அதிக வெப்பத்தினால் அப்பகுதி திடீரென விரிவடையும்போது உண்டாகும் சத்தத்தைத்தான் இடி என்கிறோம் .
அப்போது ஏற்படும் வெளிச்சம்தான் மின்னல் .ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் , இடி முதலில் தோன்றினாலும் மின்னல்தான் நம்மை முதலில் வந்தடைகிறது .
இடிதாங்கி !
இடிதாங்கி ஒன்றே பெரிய கட்டடங்களையும் , வீடுகளையும் இடியிலிருந்து காப்பதற்கான வழி என்ற நிலையில் எங்கு கிடைக்கின்றன இடிதாங்கிக் கருவிகள் ?
சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு கடையில் கிடைக்கிறது . அங்கு , " பைப் , ராடு டைப் என இரண்டு வகையான இடிதாங்கிகள் விற்பனைக்கு உள்ளன .பைப் வகை 950 -- 1,000 ரூபாய் வரையிலும் , ராடு வகை 2,750 --4,250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது .முழுவதும் காப்பரால் ஆன இந்த இடிதாங்கிகள் , எந்தக் கோணத்தில் இடி விழுந்தாலும் கிரகித்துக்கொள்ளக் கூடியவை .
இடியிலிருந்து வரும் மின்சாரத்தைக் கிரகித்து பூமிக்குள் அனுப்புவதற்காக இடிதாங்கியுடன் காப்பர் ஒயர்கள் இணைக்கப்பட்டு , அவை பூமிக்குள் புதைக்கப்படுகின்றன .
--சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ரமணன் .ஆனந்தவிகடன் .( 05-11-2008 ) .

No comments: