Friday, November 21, 2008

'விரல்கள்' சாதனை !

மேகாலயாவைச் சேர்ந்த தமிகி பஸாவுக்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்ததும், அதிக விரல்கள் கொண்ட 3 நபர்கள் உள்ள நாடு என்று இந்தியாவுக்கு ஒரு தனிச்சிறப்பு கிடைத்துவிடும்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில், கை-கால்களில் அதிக விரல்கள் கொண்ட நபர்கள் என்று 2 இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.இந்நிலையில் '25 விரல்' நபரான தமிகி பஸாவும் கின்னஸ் அங்கீகரிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.இவர் ஜெயின்ஷியா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.கைகளில் 13 விரல்கள், கால்களில் 12 விரல்கள் இருந்ததால், 'ஜெயிக்க முடியாத அதிசயப்பிறவி'என்ற அர்த்தம் கொண்ட பினார் மொழி வார்த்தையான 'தமிகி' என்ற பெயரை பெற்றோர் சூட்டினர்.
"இந்த விரல்கள் தானே கேவலம் என்று, இந்த விரல்களைப் பார்த்துப்பார்த்து ஆத்திரப்படுவேன், கின்னஸ் விஷயம் தெரிந்தபிறகு, இந்த விரல்கள் மீது புது பாசம் வந்திருக்கிறது" என்று கை விரல்களுக்கு முத்தம் கொடுத்தபடியே தெரிவித்தார் தமிகி !.
--தினமலர். 15-11-2008.

No comments: