Thursday, November 20, 2008

தாய் !

"பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி" வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை:
"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"
--ஆனந்தவிகடன். ( 19-11-2008 ).

No comments: