Sunday, October 19, 2008

மாதிரி.!

சோத்தைப் போட்டு தொண்டையை நெறிக்கிற மாதிரி !
அண்ணனைக் கொன்ற பழியை சந்தையில தீர்த்துக்கற மாதிரி !
அடை மழை பெய்ததில ஆட்டுக்குட்டி செத்த மாதிரி !
துளியூண்டு மோர் மொத்த பாலையும் கெடுத்திடுங்கிற மாதிரி !
நெருப்புக்கு காத்து உதவுற மாதிரி !
குடியிருக்கிற வீட்டுக் கூரையைக் பிய்த்து எறிகிறது மாதிரி !
சங்கு ஓட்டையா இருந்தாலும் , சத்தம் வந்தா சரிங்கற மாதிரி !
ஏணிப்படிக்கு கோணல் கழி வெட்டின மாதிரி !
பொதுப் பானையை நடுத் தெருவுல உடைக்கிற மாதிரி !
சுருக்கம் விழுந்த கழுத்துல முத்து மாலை தொங்கற மாதிரி !
முழுகி எழுந்திருக்கற போதெல்லாம் முத்துக்களை அள்ளிட்டு வர மாதிரி !
ராஜா இருந்தாலும் பட்டணம் பாழாப் போறதேங்கற மாதிரி !
அக்னி மலையில கற்பூர அம்பு விழுந்த மாதிரி !

No comments: