Friday, October 3, 2008

பழமொழிகள் !

பிராணிகளிலேயே நிமிர்ந்து நடக்கும் பிராணி மனிதன் தான். அப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு நல்ல மனைவி வாய்க்காவிட்டால் அவனால் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.!
உணவுப் பொருளை உண்டக்கிக் கொடுத்து, தானும் உணவாவது மழை.!
அறிவு வளரக் கூடியது, ஞானம் நிலைத்து விடக் கூடியது.
மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.
கேட்பதை எல்லாம் நம்பாதே, தெரிந்ததை எல்லாம் சொல்லாதே.
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை.
ஆடவருக்கு தொழில் உயிர், பெண்களுக்கு ஆடவர் உயிர் !
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லசமாகத் திரிகின்றன. நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.

No comments: