Thursday, October 2, 2008

செய்தித் துளிகள்.

ஜனகராஜன் தனது மிதிலாபுரி முழுவதும் பற்றி எரிகிறது என்று சொல்லியும் அசைவற்றிருந்தார்.
பிரம்மா, மன்மதன், அமுதவல்லி, சுந்தரவல்லி ஆகிய நால்வரும் விஷ்ணுவின் குழந்தைகள்.
கீழே உள்ள 7 உலகம்:-அதலம், விதலம், சுதலம், ரஸாதலம், தலாதலம், மஹாதலம், பாதாலம்.
' த்ருதராஷ்ட் ரன்' என்றால் (ராஷ்ற்றம் ) அரசாட்சியை ( த்ருதன்) தாங்கியவன் என்று பொருள். அந்தப் பெயர் அவர் பிறந்தசமயத்திலேயே அவருக்குக் கொடுக்கப்பட்டது.
நாரதர் :- முற்பிறப்பில் வேதியர் ஒருவரின், வீட்டு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தவர்.
தசரத சக்ரவர்த்தியின் தந்தை பெயர் 'அஜன்' - கொள்ளுத்தாத்தா 'ரகு' , எள்ளுத்தாத்தா பெயர் 'திலீபன்'.
இராமன்-சீதை( ஜானகி)., லட்சுமணன்-ஊர்மிளை, குசன்-சம்பிகா, லவன்- சுமதி.
திரிமூர்த்திகள் பிர்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் மஞ்சள், கருப்பு, வெளுப்பு: இந்த மூவருடைய சக்திகளும் முறையே வெளுப்பு, மஞ்சள், கருப்பு நிறங்கள். பராசக்தி சிகப்பு நிறம்.
அகத்தியரின் மனைவி பெயர் உலோபாமித்திரை.

No comments: