Saturday, September 27, 2008

கல்வி.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்து போன பின் எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.-ஜார்ஜ் ஸனவல்.
சிறந்த ஆசிரியர் மாணவன் நிலைக்கு இறங்கி வந்து, அவன் கண்களால் பார்த்து, அவன் காதுகளால் கேட்டு, அவனது அறிவாற்றலுக்கு ஏற்பப் புரிந்து கொண்டு உணர்த்தவும் செய்வான். -விவேகானந்தர்.
ஆசிரியர் ஆவதற்கு அறிவுத் திறன் மட்டும் போதது, நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்க வேண்டும்.-எமர்சன்.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது.எந்தப் பிரச்சனையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச் சுடர் பிறக்கிறது.-விவேகானந்தர்.
கல்வியின் நோக்கம் பொருள்களை அறிவது மட்டுமன்று : வேலைக்கு அடிப்படை அமைப்பதும் அல்ல: பெருந்தகையாளனாகவும், பேரறிஞனாகவும் செய்வதே.-ரஸ்கின்.
கல்வி ஏழைகளுக்கு மூலதனம். செல்வந்தனுக்கு வட்டி! -ஹேரேஸ்மன்.
ஒரு மாணவன் மோசமானவனாக மாறினால் அது அவனை மட்டுமே பாதிக்கிறது. ஒரு ஆசிரியர் தம் கடமையைச் சரியாகச் செய்யாது போனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிக்கப்படுகிறார்கள்.-சத்ய சாயி பாபா.
சிந்திக்காமல் படிப்பது வீண்: படிக்காமல் சிந்திப்பது ஆபத்து -கன்பூசியஸ்.
செய்யத் தெரிந்த மனிதன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.-கர்னல் கீல்.
தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்ப்பவரே குரு.
கல்வித் துறையின் மிகமுக்கியமான நோக்கம் தன்னம்பிக்கையை வளர்பதாகவே இருக்க வேண்டும்.-விவேகானந்தர்.
மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றியே அடங்கியுள்ளது. இதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.-எமர்சன்.

No comments: