Monday, September 15, 2008

ரத்தம் உறைவதை தடுக்க பாம்பு விஷம்.

பாம்பு விஷத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட இரண்டு பொருள்கள், மனிதரது ரத்தக் குழாய்களில் ரத்தம் கட்டி தட்டிப் போவதை தடுக்கவும், கரைக்கவும் வல்லவை என கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் 'கிங் பிரவுன்' ( KING BROWN ) மற்றும் 'முல்கா' என்ற பாம்புகளின் விஷங்களிலிருந்து இப்பொருட்களை வேதியியல் முறைப்படி பிரித்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.' கிங் பிரவுன்' விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு கடி வாயிலிருந்து இரத்தம் கசிவது நிற்பதில்லை என்பதை இவர்கள் கவனித்தனர். ஆதலால் இரத்தம் உரையாமல் , கட்டி தட்டாமல் தடுக்கும் குணம் அவ்விஷத்துக்கு இருக்கிறது என்று அவர்கள் ஊகித்தனர்.
--தினமணி, பிப்ரவரி, 2 , 1990. வெள்ளிக்கிழமை.

No comments: