Thursday, September 11, 2008

விக்கல்.

விக்கல் என்பது அனிச்சை செயல். டயாஃப்ரம் சுருங்கும்போது மூச்சுக் குழலின் மீதுள்ள மூடியான ' க்ளோடிங்' அடைபடுகிறது. அதனால் விக்கல் ஏற்படுகிறது.
விக்கலுக்கு எந்த விதமான காரண காரியங்களுமே இல்லாமல் கூட இருக்கலாம். ஏதாவது வியாதியின் அறிகுறியாகக்கூட இந்த விக்கல் இருக்கலாம். மூளைக்குச் சரியான இரத்த ஓட்டம் இல்லாமை, மனக் குழப்பம், குடல் வாதம் , அஜீரணம் போன்றவை கூட விக்கல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இரத்ததில் யூரியா அதிகரிக்கும் போது அதைக் குறைக்கத் தண்ணீர் தேவைப் படுகிறது.அதன் அடையாளம் தான் இந்த விக்கல். தண்ணீர் குடிப்பது, அதிர்ச்சியான செய்திகளை கேட்பது எல்லாம் மான்சீகமாக ஏற்படும் விக்கல்களைத்தான் நிறுத்த உதவும்.
--டாக்டர். நிர்மலா செந்தில்நாதன். சாவி இதழ், 11-01-1987.

No comments: