Sunday, September 7, 2008

ஸகாரா--ஸாகரம்--மார்வாடி !

இப்போது ஸகாரா பாலைவனமாக இருப்பது ஒரு காலத்தில் ஸமுத்திரமாக இருந்த இடம் என்று ஜியாலஜிக் காரர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு இராமாயணக் கதை தெரிந்திருக்கலாம்.
ஸகரன் என்ற ராஜாவின் பிள்ளைகள்தான் பூமியை வெட்டிக்கொண்டே போய் ஸமுத்திரத்தை உண்டாக்கினார்கள் என்று அதில் சொல்லியிருக்கிறது. ஸகர புத்திரர்கள் வெட்டியதாலேயே ஸமுத்திரத்திற்கு ' ஸாகரம்' என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.ஸாகரம் என்ற பெயர் மருவி ' ஸகாரா' என்றாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் ராஜஸ்தானம் இப்படிப்பட்ட பாலைவனமாகத்தான் இருக்கிறது. பாலைவனத்திற்கு ஸம்ஸ்கிருதத்தில் 'மருவாடிகா' என்று பெயர். இதனால் தான் ராஜஸ்தான் காரர்களை 'மார்வாடி' என்று நாம் சொல்கிறோம்.
--அருள் வாக்கு. ஜகத்குரு காஞ்சி காமகோடி.

1 comment:

க. சந்தானம் said...

நெல்லை தமிழில் மறு பிரசுரம் செய்ததற்கு மிக்க நன்றி !