Thursday, August 21, 2008

இராமாயணக் கணக்கு !

எண்ணஞ்சு கால்சிரனை எண்பதுகா ணிச்சிரன்
எண்னிமனம் கொல்கவென்று கூறியதேன்?-
ஒண்ணுதலாய் ,
ஆன'ச' நான் கு அரிய ' த' ஒன்பது
தானெடுத்துப் போனதனால் தான் !
-சதாவதானி செய்குதம்பி பாவலர்.
பொருள்:-
எண்ணஞ்சு---நாற்பது
எண்ணஞ்சு கால் சிரனை--- பத்து தலை இராவணன்.
எண்பது காணி---ஒன்னு.
எண்பது காணி சிரசன்--- ஒரு தலை இராமன்.
ஏன் கொல்ல எண்ணினான் ?
ஆன'ச' நாலு---'ச' வரிசையில் நாங்காவது எழுத்து ' சீ'
அரிய'த' என்பது --- 'த' வரிசை 9 வது எழுத்து 'தை'
சீதையை எடுத்துச் சென்றது தான்.
-தினமணி சுடர் ( 11-07-1992 ).

No comments: