Thursday, August 7, 2008

தனிப்பாடல்- சஞ்சலம் !

அன்றுதான் அன்னையும், தந்தையும் அனுபவிப்பதும் சஞ்சலம்,
அங்கொரு ஜ்லத்துளி தரிப்பதும் சஞ்சலம்,
தரித்தபின் ஆளானதும் சஞ்சலம்,
பெண்ணையும் , மண்ணையும் விரும்புவதும் சஞ்சலம்,
பெற்ற மகன் இல்லாதிருப்பதும் சஞ்சலம்,
பெற்ற பின்பும் சஞ்சலம்,
எண்ணரிய திரவியம் தேடியும் சஞ்சலம்,
தேடாதிருப்பதும் சஞ்சலம்,
என்றுதான் சஞ்சலம் ஒழிந்து யான் உன் திருவடிக்கு ஆளாவேனோ!
விண்ணவர் தொழும் கருணைப் பிரகாசமே
வாழும் மயிலேறி வரவேணும் எந்தன் அருகே!
என் அத்தை மகன் .வித்வான் .R.சங்கரனாராயணன். 04-05-1970 ல் கூறக்கேட்டது.

No comments: