Saturday, August 2, 2008

ஆந்தை சொல் !

ஓர் உரை உரைக்குமாயின் உற்றதோர் சாவு சொல்லும்.
ஈருரை உரைக்குமாயின் எண்ணிய கருமம் நன்றாம்.
மூவுரை உரைக்குமாயின் மோகமாம் மங்கை சேர்வாள்.
நாலுரை உரைக்குமாயின் நாழியில் கலகம் சொல்லும்.
ஐந்துரை உரைக்குமாயின் அங்கதோர் பயணம் சொல்லும்.
ஆறு உரை உரைக்குமாயின் அடுத்தவர் வரவு சொல்லும்.
ஏழு உரை உரைக்குமாயின் , இறந்த பண்டங்கள் போகும்.
எட்டுரை உரைக்குமாயின், கிட்டென சாவு சொல்லும்.
ஒன்பதும். பத்துமாகில். உத்தமம் மிகவும் நன்றே !
-நடேச. வைத்தியநாதன். கூறக்கேட்டது. (24-07-1996).

No comments: