Sunday, August 10, 2008

உண்டி 4, சுவை 6 !

"உண்டி நால்விதத்தினில் அறுவகைச் சுவைதனில்" எனப் பெரியபுராணம் கூறும். மேலை நாட்டார் சாப்பிடும் முறையை Eating-Drinking என இருவகைப் படுத்துவர். ஆனால் தமிழ் முறைப்படி பார்த்தால்:-

1)உண்டல்: இலையில், அமர்ந்து உண்ணும் முறை.
2)தின்றல்: மென்று தின்பது (உ.ம் சீடை,முறுக்கு, கறி பொரியல்...)
3)பருகுதல்: குடிப்பன (உ.ம் .காப்பி, தேனீர் ரசம்...)
4)நக்குவன: இலையில் பரிமாறி எடுத்து நாக்கினால் நக்குவன (உ.ம். பாயசம்).

அறுவகைச் சுவை:
இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, கைப்பு துவர்ப்பு எனும் அறுவகை சுவை உடைய உணவுப் பொருட்கள்.

நன்றி: பொன். முருகையன்(ஸ்ரீ குமரகுருபரர் மாத இதழ்)

No comments: