Tuesday, June 24, 2008

தாய் நாடு

உலகம் முழுவதும் 'Mother Country ' என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெர்மனியில் மட்டுமே 'Father Country' என்று சொல்கிறார்கள். "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே......." என்று பாரதி சொன்னதற்குரிய சிறப்பான காரணம் ஒன்று உண்டு. "தந்தையர் நாடென்ற பேச்சினிலே......" என்ற வரிக்கு அடுத்ததாக, "ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே" என்று சொல்லும் பொது ஆண்மை, வீரம் போன்றவற்றையும் சுட்டி காட்டுகிறார். ஆண்மை, வீரமும் பொதுவாக ஆண்களுக்கே உரியது. 'தாய்' எனப்படும் போது தாய்மை, அன்பு, பரிவு, கனிவு ஆகியவற்றையே முன் வைக்கப்படும். சக்தி, வீரம், ஆண்மை என்று சொல்லப்படும்போது தான், "தந்தையர் நாடு" என்று குறிப்பிடுகின்றார்.

Dr.அ.ச.ஞானசம்பந்தம் கூறக்கேட்டது (30-06-1988).

No comments: